TRAIN THE TRAINER (TAMIL) பயிற்சியாளர் பயிற்சி பட்டறை

GOOGLE-1

Sunday, April 14, 2019

தோழ'மை' சக்தி தோற்றுப்போகுமா? (4.5 லட்சம் தோழமைகளை பெற்றுத்தந்த அந்த ஒருநாள்.....)

தோழ'மை' சக்தி தோற்றுப்போகுமா? (4.5 லட்சம் தோழமைகளை  பெற்றுத்தந்த அந்த ஒருநாள்.....)
பணப்பெட்டி உங்களின் கையில் இருக்கிறது, அதன் சாவி இல்லையே என்று கலக்கமா?

ஒரு நிஜ சம்பவத்தை கூறுகிறேன்.. சில வருடங்களுக்கு முன்பு-என நினைக்கிறேன்.... அனைவரும் அலுவலகம் செல்லும் பரபரப்புமிகுந்த காலைநேரம்,  நான் உட்கார்ந்திருந்த அந்த தனியார் பேரூந்தில் இனிமையான பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது...." பாடல்:-வேலை வேலை வேலை மேல மேல வேலை ஆம்பளைக்கும் வேலைபொம்பளைக்கும் வேலை பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேலை..என்ற அவ்வை ஷண்முகியின் பட பாடல்  ஒலித்துக்கொண்டிருந்தது  https://youtu.be/efx5qNSJDNI 

அன்று நான் அலுவலகம் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து, வழியில் ஒரு இடத்தில் சட்டென்று நின்றுவிட, பேரூந்து நின்ற இடத்தில் எந்த பேருந்து நிறுத்தமும் இல்லை, சுற்றுவட்டத்தில் வெகு தொலைவில் ஒரு சிறு வீடு தெரிந்தது, சாலையிலும்  யாரும் பேருந்தை நிறுத்தாதபோது, பேருந்து ஏன் நின்றது? பேரூந்தின் சன்னல் வழியே எட்டிப்பார்த்தேன், பேரூந்து ஏன் நின்றது என எனக்கு எதுவும் புரியவில்லை.  பேருந்தின் ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் ஒலி செய்துகொண்டிருந்தார்,.... யாரையோ அழைக்கிறார் என்பது தெரிந்தது. அங்கு நின்றுகொண்டிருந்த அந்தப் பேரூந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் ஓசை சற்று ஒலி குறைக்கப்பட்டிருந்தது.....   "பாடி அழைத்தேன் உன்னை இதோ, தேடும் நெஞ்சம் வாராய் ..என் தேவி..பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை...என்ற ரசிகன் ஒரு ரசிகை படப்பாடல்  ஒலித்துக்கொண்டிருந்தது https://youtu.be/pcWUqm8T-Pw 


வெகு தொலைவில் இருந்த அந்த வீட்டின் கதவு  ஒன்று திறக்கப்பட்டதும் அங்கிருந்து ஒருவர் பேரூந்தை நோக்கி ஓடி வந்தார்..... அப்போது பேரூந்தில் இருந்த அனைவரும் வாருங்கள் ஷர்மா ஜி என்று ஜன்னல் வழியாக கையை அசைத்து அழைத்தது எனக்கு பெரும் வியப்பைத் தந்தது. ஆகவே பேருந்தை நோக்கி ஓடி வரும் அவர் இந்த பேருந்துக்கு சொந்தக்காரரோ? அல்லது இந்த பேருந்தின் நிறுவனத்தில் பெரிய அதிகாரியோ? அல்லது மிகவும் பிரபலமான ஒருவராக இருப்பார், என்று நினைத்தேன்.  இப்போது அந்தப் பேரூந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் முடிவடைந்து வேறு ஒரு பாடல் ஒலிக்கத்தொடங்கியது .. வா வா வா வெண்ணிலா ஆ ஹா, உன் கண்கள் வெண்ணிலா, ஆ ஹா, என் நெஞ்சில் நீயும் இறங்கி, ஏதோ மாயம் செய்தாய் ஆ ஹா, என் அன்பே வா ஆ ஹா, என் அன்பே வா ஆ ஹா  https://youtu.be/J28_McaEl50 

அப்படி வேகமாக ஓடிவந்த அவர் பேருந்தில் ஏறியதும், முதலில் பேருந்து ஓட்டுனரை நலம் விசாரிக்க... தொடர்ந்து பேருந்தில் இருந்த அனைவரையும், முன் பின் தெரியாத என்னையும் சேர்த்து  நலம் விசாரித்து வணக்கம் கூறினார். மரியாதை நிமித்தம் நானும் வணக்கம் கூறி நன்றி தெரிவித்தேன். அப்போது அந்தப் பேரூந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் அடுத்தப் பாடலுக்கு தாவியிருந்தது .. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்.. https://youtu.be/JjRs0KjYzbo

அந்த நிறுத்தத்திலிருந்து கிளம்பிய பேரூந்து சிறிது தூரம் சென்றுகொண்டிருக்கும்போது நான் எனது அருகில் அமர்ந்திருந்தவரிடம்..... சற்றுமுன் ஓடிவந்து பேரூந்தில் ஏறினாரே "ஷர்மா ஜி"  அவர் உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவரா? உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவரா? என கேட்டபோது.  அதற்கு எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் "அதெல்லாம் இல்லை, அவர் எந்த அலுவலகத்தில் வேலை செய்கிறார் என்றே தெரியாது, தினமும் இந்த நேர பேருந்தில் பயணம் செய்பவர். தினமும் நலம் விசாரிப்பவர்.  ஏதோ அவரை எங்களுக்கு பிடித்துவிட்டது, அப்படி தொடங்கி எங்களது நட்பு அறிமுகமானது, நாளடைவில் தொடர்ந்து நாங்கள் அவரின் இனிய நண்பரகளாகிவிட்டோம் என்றார். இப்போது என்னுடைய மனது "மயிண்ட்வாய்ஸ்" இந்தப் பாடலை முணுமுணுத்தது ..." என் பிரெண்ட போல யாரு மச்சான்.. அவன் டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான். .படம்: நண்பன்,  இசை: ஹாரிஸ் ஜெயராஜ், பாடலாசிரியர்: விவேகா, பாடியவர்கள்: கிரிஷ், சுசித் சுரேசன். https://youtu.be/97G5LfyFrrI

பேரூந்தில்  அவசர அவசரமாக ஓடி வந்து ஏறிய "சர்மா ஜி" அனைவரையும் பார்த்து சப்தமாக பேசினார்  "இன்று காலையிலிருந்தே எனக்கு தலைவலியாக இருந்தது, எனவே பேருந்து வருவதற்கு முன்பாகவே சாலை ஓரம் காத்திருக்கமுடியவில்லை" ஆகவே பேருந்தை, சற்று காலதாமதமாக்கியதற்கு மன்னிக்கவும் என்று சொன்னவுடனே .... அந்தப்பெருந்திலிருந்த பலரது கைகளில் தலைவலி மாத்திரையும் தண்ணீர் பாட்டிலும் "சர்மா-ஜி" அவர்களை நோக்கி குவிந்ததைப்பார்த்த எனக்கு மேலும் வியப்பைத்தந்தது. அதோடு பேருந்து ஓட்டுநர் குரல்கொடுத்தார் "சர்மா-ஜி வண்டியை மருந்துக்கடையில் நிறுத்தவா?"  என்று கூறி  ... மேலும் எனது வியப்பை அதிகப்படுத்தினார்....  அந்தநேரத்திற்கு ஏற்றாற்போல் பேருந்தில் இந்தப்பாடல் ஒலித்தது....  நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது  https://youtu.be/g3k1BdS-t2Y 
       
எனக்கு மிகுந்த ஆச்சரியமும், அவரின் ஏராளமான நட்பு வட்டத்தைப்பார்த்து பொறாமையாகவும் இருந்தது.  அன்று நான் அது பற்றி யோசிக்க தொடங்கியதின் விளைவாக,  இன்று எனக்கு கடல் கடந்த நிலையிலும் ஏராளமான நட்பு வட்டங்கள் மேலும் மேலும் தொடர்ந்து பெருகிவருகிறது. அப்படிப்பட்ட ஏராளமான நட்பு வட்டத்தைப் பெற்று ஏதாவது பயனுள்ளதாக இருக்கவேண்டாமா? அப்படி மனம் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது இந்தப்பாடல் இனிமையாக ஒலித்தது.... "கோ" என்ற கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011 இல் வெளிவந்தபடத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல்  "கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு..https://youtu.be/700-GQQGm_k

அன்று அப்படி உருவான சிந்தனையில் ஒரு பகுதிதான், இலவச வேலைவாய்ப்பு சேவை என்கிற "FREE JOBS" G+ and Face Book ஜி+ குழுப்பக்கம் மற்றும் முகநூல் குழு  போன்ற உதவும் குழுக்கள் உருவானது ... இருந்தும் முக்கியமாக பொருளுதவி மற்றும் பணம், செலவு போன்ற எந்த செயல்களும் நட்பை முறிக்கும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.  என்னதான் கவனமாக இருந்தாலும், ஆர்வமிகுதியால் எனக்கு கிடைத்த சில நன்மைகள் மற்றவர்களுக்கும் கிடைக்கட்டும் என்கிறநோக்கில், சில  நண்பர்களுக்கு சொன்ன சில இலவச ஆலோசனையால் எனது மூக்கை நானே  உடைத்துக்கொண்ட அனுபவங்களும் உண்டு.  

உங்களின் தொடர்பில் இருக்கும் நட்பு வட்டத்தில் அனைவரிடமும் அவர்களின் அலுவலங்களில் இருக்கும் காலி இட வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை கேட்டு வாங்கி சேகரித்து அதை வேலை தேடும் புதிய முகங்களுக்கு இலவசமாக உதவினால்... உங்களின் நட்பு மேலும் மேலும் பெருகும் அல்லவா?. அப்படி உருவாகிய புதிய பல நட்புக்களின் மகிழ்ச்சியால், மேலும் மேலும் நமது வலிமை கூடும் அல்லவா? அப்படிப்பட்டவர்களின் ஏராளமான நட்பு வட்டம் விரிவடைவது, மிகப் பெரிய வரப்பிரசாதம்.  இப்படிப்பட்ட விசாலமான நட்புவட்டம் அமைவது எத்தனைபேருக்கு நடைமுறையில் சாத்தியமாகிறது?. 
நீங்கள் எந்த நாட்டில், எந்த அலுவலகத்தில் வேளையில் இருந்தாலும், உங்களது நிறுவனத்தில் இருக்கும் காலி வேலைவாய்ப்பு விவரங்களை இந்த FREE JOBS G+ மற்றும் FREE JOBS -Face-Book-group முகநூல் குழு பக்கங்களில் பதிவுசெய்தால் அல்லது தெரியப்படுத்தினால், அது புதியதாக படிப்பை முடித்துவிட்டு வேலைதேடுபவர்களுக்கும், தற்போதைய வேலையிலிருந்து மேலும் சிறப்பான வேறு ஒரு வேலை தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும் அல்லவா?... இப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போது இந்தப்பாடல் எனது செவிகளுக்கு உணவளித்தது.... வாரணம் ஆயிரம் படப்பாடல் "அடியே கொல்லுதே! அழகோ அள்ளுதே! உலகம் சுருங்குதே! இருவரில் அடங்குதே! உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்....  https://youtu.be/oNTOpHEpGiA


உங்களின் தொடர்பில் இருக்கும் நட்பு வட்டத்தில், அனைவரிடமும் அவர்களின் அலுவலங்களில் இருக்கும் காலி இட வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை கேட்டு வாங்கி சேகரித்து அதை வேலை தேடும் புதிய முகங்களுக்கு இலவசமாக உதவினால்... காசா? பணமா? இலவசம்தானே..... ஒருமுறை இந்த FREE-JOBS G+ கூகுள் + குழு பக்கத்திற்கு வந்துதான் பாருங்களேன் இந்த முகவரியில் https://plus.google.com/communities/110765544331828488794
 FREE JOBS
இப்போது சொல்லுங்கள் உங்களைச்சுற்றி உங்களுக்கு தெரியாதவர்கள் என நிறைய மனிதர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் நீங்கள் உடனடியாக அனைவரையும் தெரிந்தவர்களாக நடப்பை ஏற்படுத்திக்கொள்ள, அவர்களோடு நலம்விசாரித்து பழக முயற்சிக்கவேண்டுமல்லவா????  மின்னலே படத்திலிருந்து பாடல் "ஓ மாமா மாமா மாமா மாம மாம மாமோமியா, ஓ SUNDAY MONDAY TUESDAY ஏழு நாளும் KEEP IT FREEயா, பிஸ்மில்லா பிஸ்மில்லா நம் வாழ்வை வாழ்வோம் PLAYFUL ஆ, ஊ லால்லா ஊ லால்லா இது WESTERN கானா கோபாலா, உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும் மின்சாரப் பாடலா" ... https://youtu.be/TpbFPbxi8Fk

ஏராளமான பணம் நிறைந்த பணப்பெட்டி உங்களின் கையில் இருக்கிறது, அதன் சாவி இல்லையே என்று கலக்கமா?  குரல் கொடுங்கள்... நலம் விசாரியுங்கள்... ஏராளமான நட்புக் கைகள் உங்களுக்காக உங்கள் பணப்பெட்டியின் சாவியை தேடிக் கொண்டுவந்து உங்கள் கையில் தருவார்கள்....  (ம் ம் ....உங்களது மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது... இருந்தாலும் கொஞ்சம் உண்மையை பேசுங்களேன்).... 
பாடல் .....கொஞ்சம் உளறிக் கொட்டவா? கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா? கொஞ்சம் வாயை மூடவா? கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா?... பாடலின் படம்: "நான் ஈ" இசை: மரகதமணி பாடியவர்: விஜய் பிரகாஷ்... https://youtu.be/FWuAwZs13SI    

என்ன நண்பர்களே இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஏன் என்ற கேள்விஇங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்றஎண்ணம். கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை..... https://youtu.be/2wX5E6qlqdI 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்க்கோனி....புது தில்லியிலிருந்து.   

Thursday, April 11, 2019

"EXCHANGE OFFER -ஒரு உண்மை உயிர்த்தெழுகிறது"


"EXCHANGE OFFER -ஒரு உண்மை உயிர்த்தெழுகிறது" 


பொறியியல் கவுன்சிலிங் முடித்து.... தான் ஆசைப்பட்ட கல்லூரியை தேர்வு செய்த திருப்தியுடன் வெளியே வந்தாள் கஸ்தூரி. ஆட்டோ ஓட்டி தன் மகளை பொறியியல் கல்லூரி வரைக்கும் கொண்...டு வந்த திருப்தியுடன் கந்தசாமியும் இருந்தார். ஆனாலும் இன்னும் நான்கு வருடங்களுக்கு செலவு செய்ய வேண்டிய தொகை ரொம்பவே பயமுறுத்தத்தான் செய்தது. கவுன்சிலிங் நடந்த ஹாலை விட்டு வெளியே நடந்து வந்து கொண்டிருந்த போது "எக்ஸ்கியூஸ்மீ" என்ற குரல் கேட்க இருவரும் திரும்பினர். அழைத்தது ஒரு பெண். "உங்களிடம் கொஞ்சம் பேசலாமா" என்று கேட்டுக்கொண்டே அருகிலிருந்த காருக்கு அருகில் அழைத்தாள். கந்தசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கஸ்தூரியை அழைத்துக் கொண்டு அருகில் சென்றார். தன்னை மதுமதி என்று அறிமுகம் செய்து கொண்ட அந்த பெண்மணி கந்தசாமியின் முழு பயொடேட்டாவையும் இவரிடமே சொல்ல இவருக்கு தூக்கி வாரிப் போட்டது.... ஆனாலும் அந்த பெண்மணி சொன்ன டீல் கந்தசாமிக்கு கொஞ்சம் கிறங்கடிக்கத்தான் செய்தது. கஸ்தூரி தேர்வு செய்திருந்த முதல் தர வரிசை கல்லூரியின் பிரதிநிதியான அந்த பெண்மணி சொன்ன டீல் என்ன தெரியுமா? தங்களுக்கு சொந்தமான புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த இன்னொரு கல்லூரியில் சேரும்படியும் அதற்கு பிரதிபலனாக நான்கு வருடங்களுக்கான மொத்த கல்விக் கட்டணத்தையும் கல்லூரியே ஏற்றுக் கொள்வதுடன் ஒரு கணிசமான தொகையும் கையில் தருவதாக சொன்னார்.

இங்கே விஷயத்துக்கு வருவோம். கஸ்தூரி முதலில் தேர்வு செய்த கல்லூரியில் அவள் தேர்வு செய்த பிரிவின் விலை சுமார் 12 லட்சம். அதனை அவள் சேராமல் விட்டு விட்டால் அந்த இடம் கல்லூரி கோட்டாவுக்கே போய் சேர்ந்து விடும். பின் அவர்கள் அதனை கவுன்சிலிங் முடிந்தவுடன் காலி இடமாக காட்டி இன்னும் அதிக விலைக்கு விற்று விடுவார்கள். ஆனால் இந்த நான்கு வருடங்களில் கஸ்தூரிக்கு அவர்கள் கட்டும் கட்டணம் சுமார் 4 லட்சம் என்றும் கையில் கொடுத்த தொகை 2லட்சம் என்றே வைத்துக் கொண்டாலும் கல்லூரி முதலாளிக்கு கிடைத்த லாபம் 7லட்சம் மற்றும் அதற்கு மேல். கஸ்தூரியும் ஒரு வழியாக எந்த செலவும் இல்லாமல் இந்த ஆண்டு இறுதியாண்டினை படித்துக்கொண்டிருக்கிறாள். பல்கலைக் கழக அளவில் தரவரிசையிலும் இடம் பிடித்திருக்கிறாள். 

இந்த EXCHANGE OFFER சூப்பரா இருக்கில்ல...........சட்டம் போட்டு தடுக்குர கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது......திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது........

நன்றிகளுடன் கோகி ரேடியோ மார்கோனி, புது தில்லியிலிருந்து ...

உழைத்த நாய்க்கு 99% சதவீதம் என்றால், முதலாளியின் பார்வையில் 66% சதவீதம் மட்டுமே???

உழைத்த நாய்க்கு 99% சதவீதம் என்றால், முதலாளியின் பார்வையில் 66% சதவீதம் மட்டுமே???


ஒரு நாள் கடைக்கு நாய் ஒன்று வந்தது. முதலில் கடைகாரர் அந்த நாயை விரட்டினார் பிறகு அதன் வாயில் ஒரு சீட்டை பார்த்தார் அதில் “நாயின் கழத்து பட்டையில் 100ரூபாய் உள்ளது அதை வைத்துக் கொண்டு 5 சோப்பும் 1 ஷாம்பூவையும் கொடுத்து உதவுங்கள்” என்றிருந்தது. கடைக்காரரும் சீட்டில் உள்ளதையும் மீதி சில்லரையையும் பையில் போட்டு கொடுத்தார். நாயும் கவ்விக் கொண்டு சென்றது. கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை... 


கடையை மூடிக்கொண்டு நாயின் பின்னலேயே சென்றார். நாய் ஒரு வீட்டின் முன் நின்றது காலால் கதவை தள்ளி பார்த்து, கதவு திறக்கவில்லை. பிறகு கதவை தன் தலையால் முட்டிவிட்டு காத்திருந்தது. சத்தம் கேட்டு நாயின் எஜமானன் வந்தான். நாயை முறைத்து பார்த்துவிட்டு அதை அடிக்க ஆரம்பித்தான். கடைக்காரருக்கு பயங்கர கோபம் , எஜமானனிடம் சென்று “இவ்வளவு அறிவார்ந்த நாயை போய் அடிக்கின்றீர்களே” என்று கேட்டார். அதற்கு அந்த எஜமானன் “இந்த அறிவுகெட்ட நாய் சாவியை மறந்து விட்டு சென்றிருக்கிறது, இந்த மாதம் மூன்றாவது முறையாக இதை செய்கிறது” என்றான்...



கதையின் நீதீ: மற்றவர் பார்வைக்கு என்றுமே அதிகமாக செய்வதாக தெரியலாம் ஆனால் நம் முதளாளிகளின் எதிர்பார்ப்புக்கு நாம் செய்வது என்றுமே குறைச்சல்தான். இல்லையா! 






உங்களை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள் என்று கேட்டால், நீங்கள் 100% சதவீதம் என சொல்ல தயங்கி 99% சதவீதம் என்று கூறுவீர்களானால்... உங்களின் மதிப்பெண் "99" என்பது  உங்களுக்குத்தான் "99" என்று தெரியும், அதுவே உங்களின் எதிரில் இருப்பவர்களுக்கு "66" என்று தெரியும். ஆகவே இனி உங்களை நீங்கள் 66 என்று மதிப்பிட்டு, நூறு சதவீதத்தை எட்டுவதற்கு மேலும் நிறைய கற்றுக்கொள்ள நினைத்தால் அதுவே மற்றவர்களின் பார்வையில்  "99" என உங்களின்  மதிப்பை உயர்த்திக் காட்டும்.........அன்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.  

Five key questions for assessing your consultants:- உங்கள் ஆலோசகர்களை மதிப்பிடுவதற்கான ஐந்து முக்கிய கேள்விகள்:-

Five key questions for assessing your consultants:- உங்கள் ஆலோசகர்களை மதிப்பிடுவதற்கான ஐந்து முக்கிய கேள்விகள்:-

Managers are bombarded with advice about how to be more effective, from how to make best use of their time to how to finesse a budget, mentor their staff and handle office politics. But one important area that doesn’t receive much attention is how managers can get the most out of their consultants.

மேலாளர்கள் எப்படி தங்கள் நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துவது?, எப்படி ஒரு பட்ஜெட், அறிவுரைகளை தங்கள் ஊழியர்கள் மற்றும் அலுவலக அரசியலை கையாள்வது என்பதில் இருந்து எவ்வாறு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற ஆலோசனையுடன் அணுகுகிறார்கள். ஆனால் சிறப்பு கவனம் செலுத்தாத ஒரு முக்கிய பகுதி மேலாளர்கள், தங்கள் ஆலோசகர்களில் பெரும்பாலானவற்றை எவ்வாறு பெற முடியும் என்பதுதான் சவாலான பணியாக இருக்கும்.

Organizations have developed a variety of systems and processes to help manage consultants, but many involve elaborate and time-consuming surveys. As a corporate manager, I worked with a variety of consultants over the years and realized there were only five questions I needed to ask them:

நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருக்கிறீர்கள், உங்களது பிரிவிற்கான உற்பத்தியை அதிகரிக்கவோ அல்லது திட்டப்பணியை சிறந்தமுறையில் செய்வதற்கு தேவையான வழிவகைகளை மேற்கொள்ளுவதற்கு நீங்கள் ஒரு ஆலோசகரை நியமனம் செய்யும்போது முக்கியமாக கவனிக்கவேண்டிய 5 ஐந்து விவரங்கள் உள்ளது.

1. How have you helped me achieve my business objectives?
1.எனது வணிக நோக்கங்களை அடைவதற்கு நீங்கள் எவ்வாறு எங்களுக்கு உதவியுள்ளீர்கள்?

This question elevates the discussion from whether the specific service or product provided was well-executed or high quality to whether it supported your desired business result: Did we earn market share? Did we increase revenue? Did we receive government approval for a new project or product? A good report or marketing campaign isn’t useful if it doesn’t contribute to an end result.

2. How have you helped me manage my budget?
2. எனது பட்ஜெட்டை நிர்வகிப்பதற்கு நீங்கள் எவ்வாறு உதவியுள்ளீர்கள்?

This gets to the heart of one of the most important issues in the client-consultant relationship: value. Your consultant might bill X for something, but you might value it at half of that. Conversely, the consultant might bill at Y but create significantly more value for your company. You want consultants to think about how they provided the most value to you. Did they provide the service or product in the most cost-effective way? Did they provide exactly what you needed to meet your objective and only what you needed, or did they provide unnecessary extras that can be eliminated in future?

3. What did you teach me to help me do my job better?
3. என் வேலையை சிறப்பாக செய்வதற்கு, ஆலோசகரான தங்களிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டிய பயிற்சிகள் எவை? 

This ensures your consultant is focused not only on completing the immediate assignment but is also thinking about your long-term interests and creating lasting value for you. No organization should rent a consultant’s expertise or skills without getting some lasting benefit beyond the assignment, whether it’s in-depth knowledge about how a system works, best practices, a valuable new process, or a new relationship with a key stakeholder.

4. What did you learn from me so you can serve me better in the future?
4. எங்களது நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுக்களை பற்றி நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்? இனிவரும் காலங்களில் எங்களது நிறுவனம் மேலும் சிறப்பாக செயலாற்ற, எங்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன? அதற்கான நடவடிக்கைகள் பற்றிய விவரங்களைக் கூறுங்கள்?

Learning is a two-way street, and good consultants will demonstrate that they are continually learning about your business, your issues, your team, your management style, your culture, your strategy. The more your consultants learn about your company, the better the advice they will be able to offer, and the more cost-effective it will be.

5. What can we do to improve how we work together?
5. தங்களின் ஆலோசனை நடவடிக்கைகளுக்கு ஏற்ப, நிறுவனத்தின் நாங்கள் எப்படி உங்களோடு ஒன்றாக இணைந்து வேலை செய்து இலக்கினை அடைவது?

You and your consultant share a responsibility to continually assess the relationship and make adjustments to improve it. Suggestions can include having clearer objectives for meetings; involving the consultant earlier on; having the company and/or the consultant follow up in an e-mail after assigning or being assigned work; or providing reports to your company in shorter formats.

If your consultants are working with you on a short-term assignment, you can ask these questions halfway through and again at the end. If it is a longer-term arrangement (such as a retainer or an informal multyear relationship), asking these questions on a quarterly basis works well. Ask your consultants to answer the questions in writing one week before you meet with them for the review. Their answers to all five questions should fit on one page.

Posing these questions on a regular basis and engaging in an open discussion about the answers will lead to a better relationship with your consultant, better consultant performance, and greater value for you as a manager.

இதுபோன்ற மேலும் பல கேள்விகளை கேட்டு அதற்கான, பதில்களைப் பற்றிய வெளிப்படையான கலந்துரையாடலில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் ஆலோசகரின் சிறந்த செயல்திறன் மதிப்பிடப்படுவதோடு  மேலும் ஒரு மேலாளராக நீங்கள், அதிக மதிப்புடன் உங்களது ஆலோசகரோடு சிறந்த உறவை ஏற்படுத்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமையும். 

The present economy has served as a reminder that there are no guarantees in business. Many companies are finding themselves struggling to stay afloat, and many are sinking. In better economic days, a company could survive with a moderate profit margin achieved through dedicated attention to its bottom line. Focusing on values increases performance levels, improves service, reduces employee variability, and supports sustainability.

Call or E_mail me for a consultation:- We offer a range of services, including group learning events, individual consultations, and practice improvement initiatives.

உங்களுக்கு தேவையான ஆலோசனைக்காக என்னை அழைக்கவும்: - அல்லது உங்கள் நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிக்கும் வகையில் உங்களது ஊழியர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறவும், ஊழியர் அல்லது ஊழியர் குழுவின் கற்றல் நிகழ்வுகள், அல்லது உங்களின் தனிப்பட்ட ஆலோசனை மற்றும் நடைமுறை முன்னேற்ற முயற்சிகளை உள்ளடக்கிய பல்வேறு சேவைகளை பெற என்னை அழையுங்கள் அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். 


Call or write to find out how we can work together to achieve your business and career goals.
உங்கள் வணிக மற்றும் தொழில் இலக்குகளை எளிமையாக அடைவதற்கு நாம் எவ்வாறு ஒன்றாக இணைந்து செயல்படலாம் என்பதை அறிய,  ஆலோசகரான என்னை அழையுங்கள் அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.


Thanks & Regards,
N.Arthi Krishnan, President and Co-Founder.
In India +91-9717236514, 9871386379. Singapore +65-83176152 
IUBA-INDIA (India & Asia Pacific) 
Project Logistics:Moving the Big,Wide and Heavy.
E_mail:- info@iuba-india.com
@ Business / Projects -Planing Solutions.
@ Systems & Engineering Solutions.
@ Recruitment & Training Solutions.
@ Safety & Quality Management Solutions.
@ Promoters / Service Providers Solutions.
IUBA-INDIA.(www.iuba-india.com)


ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். ஆனால்...

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-16*

*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-1* 

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் -

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது.
3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.
6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் 

வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம்

இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் - அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை 

- நிதர்சனமான உண்மை

ஆம்

நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை. அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம். 

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400 வினாடிகள்(நேரம்) நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை. 

அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான். 

நேற்றைய பொழுது போனது போனது தான். 

ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400நொடிகள் காலம் நமக்காக நேரத்தை வாரிவழங்குகிறது. 

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா? 

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா?

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும். எனவே உங்களின் , உங்களுக்கே உரித்தான நேரத்தை பொன் போல பாதுகாத்து, அவற்றை சிறப்பாக உபயோகித்து. ....சந்தோஷமாக இருங்கள்...  சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்...... 

என்ன சுட்டீஸ்.... நேரத்தின் மதிப்பு, பணத்தின் மதிப்பைவிட உயர்ந்தது என்பதை தெரிந்துகொண்டீர்களா?

வாருங்கள் நமது நாளை மறுநாள் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டில் சிந்திப்போம்.

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. புது தில்லியிலிருந்து.

முன்னோட்டம்:-
அடுத்ததாக  நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-17*

*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-3*

Tuesday, April 2, 2019

...ஆகவே, கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?...

TRAIN THE TRINER-4
...ஆகவே, கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?...
நிறுவனர்:- நீங்க எந்த வேலைக்காக விண்ணப்பம் செய்த்திருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? 

விண்ணப்பதாரர்:- "தெரியும்... அலுவலக மேலாளர் பதவிக்கு விண்ணப்பித்து, தற்போது அதற்கான நேர்காணல் தேர்விற்கு வந்திருக்கிறேன்" ...

நிறுவனர்:- உங்களது தலைமையின் கீழ் உள்ள ஒருவர், நீங்கள் கூறும் எந்த வேலையும் செய்யமாட்டேன்,  என்று 'அடம்' பிடிக்கிறார் என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? 

விண்ணப்பதாரர்:- அவரை நேரில் அழைத்து, அதற்கான காரணத்தை தெரிந்துகொண்டு, அதை நிவர்த்திசெய்து, அவரை சிறப்பாக செயல்படுமாறு வழிநடத்துவேன். 

நிறுவனர்:- அதன்பிறகும் அவர் உங்களது பேச்சை கேட்கவில்லை என்றால், என்ன செய்வீர்கள்?


விண்ணப்பதாரர்:- அவரை கண்டித்து வேலையை செய்ய நிர்பந்திப்பேன்.


நிறுவனர்:- அதன்பிறகும், அவர் உங்களது கட்டளையை மதிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?


விண்ணப்பதாரர்:- எனது கட்டளையை மதிக்காத அவரை வேலையிலிருந்து நீக்குவதற்காக உங்களிடம் முறையிடுவேன்...

நிறுவனர்:- என்னிடம் முறையிடுவதற்கு உங்களை நான் எதற்க்காக மேலாளராக தேர்வுசெய்யவேண்டும் ... ஆகவே நீங்கள் வேறு வேலைக்கு முயற்சிசெய்யுங்கள்... நீங்கள் போகலாம்....
xxxxxxxxxxxxxx-------xxxxxxxxxxxxxxxxxx-----xxxxxxxxxxxxxxxxx

ஆகவே அதிகாரியின் கட்டளைக்கு அடிபணியாத ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது எப்படி?... என்று தெரிந்துகொள்ளவேண்டுமா?

நீங்கள் ஒரு சிறந்த நிர்வாக அதிகாரி என்றால் முதலில் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களது கட்டளைக்கு அடிபணிந்து உங்களுடன் பணியாற்றும் உங்களது குழுவிலிருப்பவர்கள் அனைவரும்  உங்களோடு சேர்ந்த ஒரு அங்கத்தினர் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். 

அப்படி உங்களது குழுவின் அங்கத்தினராக இருக்கும் எவரையும், உங்களது ஆணையை மதிக்கவில்லை என்று வேலையிலிருந்து நீக்கவேண்டும் என்றால், அது உங்களுக்குத்தான் பெரிய இழப்பு. ஆகவே, முதலில் நீங்கள்தான் அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற்றப்படவேண்டியவர்,  காரணம் நீங்கள் நிர்வாக அதிகாரியாக இருக்கத் தகுதியற்றவராகிறீர்கள்.  

உதாரணமாக ... உங்களது அங்கத்தின் கைவிரல்,  உங்களது பேச்சைக் கேட்க்காமல் எரியும் விளக்கில் கைவிரலை வைத்தால் அது விரலுக்கு ஏற்படும் கேடு அல்ல,  விரல் பேச்சைக்கேட்காமல் போனதற்குத் உங்களது தலை தான் காரணம், அதாவது தலைமை வகிக்கும் மூளைதான் காரணம். அந்த மூளைக்கு அனுபவமோ அறிவோ இல்லை என்பதாகப் பொருள். 

ஆகவே உங்களது ஆணைக்கு அடிபணியாதவரை வேலையிலிருந்து நீக்குவது என்பது,  உங்களது விரலை / கையை நீங்களே வெட்டிக்கொள்வதற்குச் சமம். 

அப்படியென்றால் ஆணைக்கு அடிபணியாதவரை எப்படித்தான் திருத்தி வழிக்கு கொண்டுவருவது என்றால் அதற்குப் பலவழிகள் உள்ளது....

வருகை தாருங்கள்.. எளிமையான, அருமையான, அனுபவப்பூர்வமான வழியில், திறமையாக செயல்படுவது எப்படி என்பதை எனது வலைப்பூவிற்குள் வலம்வந்து, எனது பதிவுகளை படித்துப் பயன்பெறுங்கள்.  
உங்களது அன்பான வருகைக்கு "http://gopalkrishnaniyer.blogspot.in" என்கின்ற இணையப்பக்கத்தின் முகவரியை சொடுக்கினால், எனது வலைதளத்தின் வரவேற்பறைக்கதவு திறக்கும்.   
....அப்போது நான் ஆந்திர மாநிலத்தின் ரேணிகுண்டா-திருப்பதி விமான தளம் அமைக்கும் திட்டப்பணியில் இருந்த நேரம்... என்னுடைய திட்டப் பணிக்குழுவில் ஒரு இளம் பொறியியல் பட்டதாரி மிகவும் மிடுக்கான தோற்றத்துடன்,  கலெக்டெர் ஒருவரது சிறப்பு சிபாரிசின் பெயரில் புதிதாக வேளையில் சேர்ந்தார்.

வேளையில் சேர்ந்த அன்றே அவர் தனக்கு இப்படிப்பட்ட வேலைகள் மட்டுமே செய்யப்பிடிக்கும் என்று பட்டியலிட்டு தந்தபோதுதான்... புரிந்தது  "இவரைப் பற்றி நன்கு தெரிந்துதான் எனது தலைமையின் திட்டப்பனிக் குழுவில் சேர்த்திருக்கிறார்கள் என்று" 

முதல் இரண்டு நாட்கள் .. திட்டப்பணிமனையை சுற்றிப்பார்த்து உங்களுக்கு என்ன புரிந்தது, அல்லது புரியவில்லை என்பதைக் கூறுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டேன். சுற்றுவட்டார மொழியான தெலுங்கு மொழியிலேயே பேசினார், அதிலும் அவருக்கான பிடிவாதம் தெரிந்தது..... (நான் பல இடங்களுக்கு  சென்று பணியாற்றியதால் எனக்கு 7 மொழிகள் பேசுவது என்பது கட்டாயமாக எனது மண்டையில் புகுத்தப்பட்டிருந்தது..... இருந்தும் சங்கீத ராகங்களில் எனக்கிருந்த ஈடுபாட்டால் தியாகராய கீர்த்தனைகளை அர்த்தம் புரிந்து ரசித்திட மூன்றேமாதங்களில்  நான் மிகவும் விரும்பி கற்றுக்கொண்ட தெலுங்குமொழி, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பெயர்ப்பலகையை படிக்கவும் மேலும் பல இடங்களில் தெலுங்கு மொழி எனக்கு மிகவும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.)      

மூன்றாம்நாள் என்னிடம் வந்த அவர்,  எந்த அளவுகளையும் குறிப்பெடுத்துக்கொள்ளாமல்,  வெறும் வாய் வார்த்தையால் அளந்துக்கொண்டிருந்தார்.  ஒரு சிறு வேலையைத் தந்து அதை செய்யுமாறு  கூறி அனுப்பிவைத்தேன் ... அது தனக்கு பிடிக்கவில்லை "அதை செய்யமுடியாது" என்று கூறி போன வேகத்தில் திரும்பிவந்துவிட்டார்.  திட்டக் குழுவினர்களோடு இணையாமல் தனித்தே இருந்ததால் எந்த வேலையையும் அவரால் செய்யமுடியவில்லை.... அதோடு எதற்க்காக செய்யவேண்டும் என்கிற இறுமாப்போடு இருந்தார். 

திட்டப்பணியிடத்தில் பொருட்களைவைக்கும் ஒரு "குடோன்" பட்டறை ஒன்று இருந்தது அதில் எனது கட்டளைக்கு அடிபணியாத அந்த இளம் பொறியாளருக்கு ஒரு மேஜை நாற்காலி போட்டு அங்கு அவருக்கு எந்த வேளையும் தராமல் வெட்டியாக  உட்காரவைத்துவிட்டேன். 

ஒரு 10 நாட்களாக கூட அவரால் வெட்டியாக உட்கார்ந்து பொழுதை போக்கமுடியவில்லை. அதற்க்கு அடுத்தநாள் என்னிடம் வந்த அவர்... மன்னிப்பு கேட்டதோடு, எந்த வேலையாக இருந்தாலும் செய்யத்தயார்...!!! என்று வழிக்கு வந்தார்... அன்று அந்த பொறியியல் பட்டதாரி செய்யத் தொடங்கிய முதல் வேலை "எடுபுடி-சிமெண்ட் கலவையை தூக்கும் சித்தாளு வேலை"...

அதை அவர் கஷ்டப்பட்டு செய்யவில்லை, இஷ்டப்பட்டுதான் செய்தார்.. என்பது பிறகு ஒரு நேரத்தில் அதேநபர் புதுதில்லி T3 விமானநிலைய திட்டப்பணியில்.... நான் விப்ரோவின் சார்பில் பணியிலிருந்தபோது, அவர்  ஜி எம் ஆர்(GMR) நிறுவனத்தில் அதிகாரியாக என்னை சந்தித்தபோது... மெழுகாக மனம் உருகிவிட்டார்..... இன்றளவும் எனது தொடர்பிலிருக்கிறார்...   

ஆக...திருவள்ளுவரின் கூற்றான  "அவர் நான நன்னயம் செய்துவிடில்.."  நன்றாக வேலைசெய்தது. 

என் கட்டளைக்கு அடிபணியாதவர்களிடம் " ஒழுங்காக நான் சொல்வதைக்கேட்டு வேலை செய், இல்லையென்றால் வேலையை விட்டு போய்விடு" என்று கோபமாக சண்டை போட்டிருக்க முடியும். சிலர் நம்மை கோபமூட்டி கொதிப்படையச்செய்ய முயற்சிப்பார்கள், அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை சரியாக எதிர்கொள்ளாதவர்கள் தோல்வியடைகிறார்கள். அவர்களது கோபமான சண்டையால் பெயரையும் மதிப்பையும் இழக்கநேரிடுகிறது.  உதாரணமாக கோபமான ஒரு நாய் நமது எதிரே வந்து குறைக்கிறது என்றால், நாமும் அதற்க்கு எதிராக நாயைப்போல் குறைக்கும்போது, நாய்க்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் இருவரும் ஒன்று என்ற நிலைக்கு தள்ளப்படுவோம்.   ஆகவே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அமைதியாக எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் என்பது, சிறந்த அனுபவமாக கருதப்படுகிறது.  

இது ஒரு சிறு உதாரணம்தான், இதைப்போல் பல் நேரங்களில் பல அனுபவங்கள் எனக்கு பாடம் கற்றுத் தந்திருக்கிறது... பலநேரங்களில் முரடர்கள் கூட பொட்டிப்பாம்பாக என் கட்டளைக்கு  அடங்கி அடிபணிந்து வேலைசெய்திருக்கிறார்கள். ... அவை அனைத்துமே "ஆடற மாட்டை ஆடி கறக்கணும், பாடற மாட்டை பாடிதான் கறக்கணும்" என்கிற நமது முன்னோர்களின் கூற்றைத்தான் நாம் சரியான வகையில் பயன்படுத்திக்கொள்வதில், நமது திறமையை நாம் உணரமுடியும். 

மேலும் இப்படிப்பட்ட பல அனுபவங்களை கீழ் காணும் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் வாங்கி படித்துப்பாருங்கள்.  இதை நான் புத்தக வியாபாரத்திற்காக சொல்லவில்லை. எனது அனுபவங்கள் சிறந்த வழிவகைகளை கற்றுத்தரும் என்று நான் நம்புகிறேன். 
எனது அனுபவங்கள் உங்களுக்கு பயனுள்ளவகையில் அமைந்து, அந்தப்புத்தகம் சிறந்த பெயரையும் புகழையும் பெறுமேயானால் .... எனது முதுமைக்காலங்களில் எனது பெயரே எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும். அதாவது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு எனது அனுபவக் கல்வி பயன்படும் என்கிற நோக்கில், அந்தக் கல்வி நிறுவனங்கள் என்னை அழைக்கும்போதெல்லாம் என் பெயர்தான் எனக்கு தேவையான நிதியை சம்பாதித்து தரும் என்பது உங்களுக்கு புரிகிறதா?... 
வானொலி நிகழ்ச்சிக்காக நான் எழுதி வழங்கியதை புத்தகமாக "கோகிலாவின் 108 நேர்காணல் அனுபவங்கள்" 

அன்பு நேயர்களே நண்பர்களே, இன்றய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? வாருங்கள் நிகழ்ச்சிக்கு செல்வோம்... 

பாடல்:- போடச்சொன்னா ...... போட்டுக்கறேன் ...... போதும்வரை ......... கன்னத்திலே..பாடலின் திரைப்படம்:- பூவா தலையா (1969) பாடலை இயற்றியவர் கண்ணதாசன், பாடலை பாடியவர் TMS, இசை MSV.

வாய்ப்பிற்கு நன்றி 
மீண்டும் சந்திப்போம்
இப்படிக்கு  கோகி-ரேடியோ மார்கோனி. 

Saturday, March 30, 2019

ஒருநாள் என்பது நமக்கு 30மணி நேரம் ஆனால் மற்றவர்களுக்கு வெறும் 24 மணி நேரம் மட்டுமே. அது எப்படி???

ஹலோ சுட்டீஸ் இனிய மாலை வணக்கம்,

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-19*
*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-4*  

ஒருநாள் என்பது நமக்கு 30மணி நேரம் ஆனால் மற்றவர்களுக்கு வெறும் 24 மணி நேரம் மட்டுமே. அது எப்படி என்று அந்த விளையாட்டை விளையாடி தெரிந்துகொள்வோமா?. 

வேகமாக இயங்கும் இயந்திர உலகில் ஒருநாள் என்பது ஆரம்பித்ததுமே முடிந்துவிடுவது போல உள்ளது. இன்றைக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பார்கள். இன்று திட்டமிடவே பாதி நாட்கள் போய் விடுகிறது என்று கூறுபவர்களும் உள்ளனர்.
ஆனால், அதே நேரத்தில் ஒரு நாளை சிறப்பாக கையாளும் ஆளுமை திறன் கொண்டவர்களும் உள்ளனர். ஒரு நாளில் எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும்? எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்படுபவர்களும் உள்ளனர். அவர்களது ஒருநாள் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

புல்லட் ட்ரெயினாய் பறக்கும் நேரத்தை யாராலும் நிறுத்தி வைக்கமுடியாது. ஆனால் அந்த நேரத்தை குறித்து அலர்ட்டாக இருந்தால் டன் கணக்கில் சாதிக்கலாமே! நம் மூளை, காலத்தை எப்படி புரிந்துகொள்கிறது,  நேரத்தை எப்படி உணர்ச்சிகள் உறிஞ்சுகின்றன, நேரத்தினை குறைத்து மகிழ்ச்சியான வாழ்வை அதிகப்படுத்துவது எப்படி என சொல்லித்தரும் ரைமிங் அண்ட் சூப்பர் டைமிங் விளையாட்டுத்தான் இந்த பயிற்சி விளையாட்டு.

நேரத்தை ரசித்து ருசித்து அனுபவிக்கும்போது அதன் அருமை புரியும்:-

பாடல் :- நிலாக் காய்கிறது, நிறம் தேய்கிறது, யாரும் ரசிக்கவில்லையே ....இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்....
  
பாடல் {....இன்னும் கொஞ்சநேரம் இருந்தாதான் என்ன? ஏன் அவசரம் என்ன அவசரம்.. நில்லு கண்ணே...}

பயிற்சி விளையாட்டு:- கேட்கப்படும் கேள்விக்கு ஒரு நிமிட நேரத்திற்குள் பதிலளிக்கவேண்டும். தவறான பதிலுக்கு உங்களுக்கு தரப்பட்ட நேரத்திலிருந்து இரண்டு (2) நிமிடம் கழிக்கப்படும். சரியான விடையையும் அதை ஒரு நிமிடத்திற்கு முன்னதாக கூறினால் மேலும் ஒரு நிமிடம் உங்களது கணக்கில் சேர்க்கப்படும். பதில் தெரியாவிட்டால் பாஸ் என்று கூறியோ அல்லது அமைதியாக இருந்து அந்த ஒரு நிமிடத்தை செலவு செய்து தப்பித்துக்கொள்ளலாம்.  இப்போது பயிற்சி விளையாட்டை விளையாடலாம் வாங்க.

இந்த விளையாட்டில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டியது தவறான பதிலை கூறி அதிக நேரத்தை இழக்கக்கூடாது. விடை தெரியவில்லை என்றால் அமைதி காத்து ஒரு நிமிட நேரத்தை செலவு செய்து தப்பித்துக்கொள்ளலாம். விடை தெரிந்தால் உடனே ஒரு நிமிடத்திற்குள் கூறி மேலும் ஒரு நிமிட நேரத்தை சேமிக்கலாம். ஆகவே இந்த விவரங்களை நன்கு நினைவில் வைத்திருந்தாலே நேரத்தை சேமித்து வெற்றிபெறலாம். சரிதானே சுட்டீஸ் நீங்களும் இந்த விளையாட்டும் விளையாடிப்பாருங்கள். நீங்கள் எத்தனை மணித்துளிகளை சேமித்தீர்கள் என்று கணக்கிட்டு வெற்றிபெறுங்கள். 

உங்களின் வாழ்க்கையின் வெற்றி வாய்ப்பிற்கு கீழ்கண்டவைகளை உங்களின் கவனத்தில் வையுங்கள் எதிர்காலத்திற்கு உங்களுக்கு பயன்படும்.  ஒரு தொழிற்ச்சாலையின், ஒரு நாளின் 24மணி நேர உற்பத்தியை, அதே 24மணி நேரத்தில் (ஒருநாளின்) 30மணிநேர உற்பத்தியாக்கி(அதாவது ஒவொரு 8 மணி நேரத்தில், 10 மணி நேர உற்பத்தி = 2 மணி நேர கூடுதல் உற்பத்தி 3shift x 8+2 =30Hrs)-லாபத்தை செயலில் செய்து காட்டிவிட்டால் எப்படிப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் அசந்து போவார்கள்" அப்படி அந்த தொழிற்ச்சாலையில் பணிபுரியும் பலரது  ஒருநாளாய 6 மணி நேரத்திற்கான சம்பளத்தை ஒரு பெரிய தொழிற்சாலைக்கு மிச்சமாககுகிறீர்கள் என்றால் ஒரு மாதத்தில் அந்த தொகையானது ஒரு பெரிய தொகையாகவே இருக்கும்.  "நேரத்தை, ஆற்றலை, பணத்தை  மிச்சப்படுத்துவதுடன்,  இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கும் புரியும்"

உதாரணமாக அறிவியல் முறை வேலை நேரம் என்பார்கள். ஒருவர் ஒரு நாளின் வேலை நேரமான 8 மணி நேரத்தில், 100 வாகன டயர்களை பொருந்துகிறார் என்றால், அவருக்கு அந்த வேலை பழக பழக அவர் மேலும் அதிவேகமாக அவரின் வேலையை செய்வார் ஆகவே அவர் 100 வாகன டயர்களை பொருத்தும் வேலையை 6மணி நேரத்திலேயே முடித்துவிடுவார் அல்லது அவரது 8 மணி நேர வேளையில் 125 வாகன டயர்களை பொருத்தியிருப்பார். அதாவது 25 டயர்கள் பொருத்தும் வேலையை அதிகமாக செய்திருப்பார். 

ஆகவே 8 மணி நேர வேலையை நேரத்தை சேமித்து 6 மணி நேரத்திலேயே முடித்துவிடுவார். அல்லது மேலும் 2 மணி நேர அதிக அளவிலான உற்பத்தியை செய்திருப்பார்.  

சுட்டீஸ் இது உங்கள் வீட்டில் வேலைக்கு போகும் உங்களது பெற்றோர்களான அப்பா அம்மா அவர்களுக்கு இந்த உதாரணத்தை எடுத்து சொல்லுங்கள் எப்போதும் அலுவலகம் வேலை என்று உங்களை கவனிக்காமல் உங்களோடு வீட்டில் சந்தோசமாக நேரத்தை செலவு செய்ய தெரியாத உங்களது பெற்றோர்களுக்கு நீங்கள்தான் விவரமாக எடுத்து கூறவேண்டும்... "என் பாசத்திற்குரிய அப்பா அல்லது அம்மா, முதலில் நீங்கள் உங்களது அலுவலகத்தில் உங்களது வேலை எது என்று நன்கு தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு நேரத்தை மிச்சம் பிடித்து அந்த நேரத்தில் உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் உங்களது குடும்பம், பிள்ளைகள்  சார்ந்த பணிகளை செய்தால் தான் எனது பெற்றோர்களான நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு  முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் எங்களுக்கும் உங்களோடு விளையாட நேரம் ஒதுக்கவேண்டும் என்று கூறுங்கள்.

உதாரணமாக ஒருவரின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் சொந்த குடும்பத்திற்காகவும் அதோடு உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம்  என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய மகிழ்ச்சியான நேரமாக"அப்பாவின் நேரமாக", உங்களின் குடும்ப உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு  6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு  6 மணி  = 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது உங்களுக்கு பணம்பழம போன்ற நெல்லிக்கனி" புரிகிறதா? என்ன சுட்டீஸ், நீங்கள்தான் இந்த உதாரணங்களைக் கூறி உங்களின் பெற்றோர்களிடம் கேட்கவேண்டும். 


@"எனக்குமட்டும் யோசிக்க இன்னும் சிறிது நேரம் தாருங்கள், மேலும் சிறப்பாக செய்யமுடியும் என்றேன்" 

"அதை சரியாக புறிந்துகொள்ளாத நிறுவனத்தின் உரிமையாளர் "வேலையை விட்டுவிட்டு உன் வீட்டிற்கு சென்று உட்கார்ந்து யோசி என்றார்" 

எனக்கு வந்த கோபத்தை செயலில் காட்டினேன்... 

அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு புரியும் படி ஒரு நாளின் 24மணி நேர உற்பத்தியை, அதே 24மணி நேரத்தில் (ஒருநாளின்) 30மணிநேர உற்பத்தியாக்கி(அதாவது ஒவொரு 8 மணி நேரத்தில், 10 மணி நேர உற்பத்தி = 2 மணி நேர கூடுதல் உற்பத்தி (3shift x 8+2 =30Hrs)-லாபத்தை செயலில் செய்து காட்டியபோது அசந்த்துபோனார்கள்" 

நான் அவர்களிடம் சொன்னது..... "நிறுவனம் எனக்கு சம்பளம் தரவில்லை நான்தான் நிறுவனத்திற்கு தருகிறேன் என்றேன் (Contribute to Company) ", அதோடு நான்மட்டுமில்லாமல் என்னுடைய குழுவினரும் கூட அப்படித்தான் என்றேன்....... 

"நேரத்தை மிச்சப்படுத்துவதுடன்,  இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கும் புரியும்" கோகி....  

Received an Award -"Double the volume of Business-2002”  

ஆக்ரோஷமான இரட்டிப்பு வியாபார  யுக்தி விருது-2002 (கோகி.....) 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

*முன்னோட்டம்*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-20*
*(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2*