TRAIN THE TRAINER (TAMIL) பயிற்சியாளர் பயிற்சி பட்டறை

GOOGLE-1

Monday, May 6, 2019

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை ! வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !

சந்தேகமும், பயமுமே ஒரு மனிதனின் மிகப்பெரிய பலவீனங்கள், அப்படிப்பட்ட ப..ல..வீ..ன..ங்க..ளை நெருங்கவிடாமல் காத்துக்கொள்ளும் மனிதன், நொடிப்பொழுதில் தீர்க்கமான முடிவுடன் எதையும் சமாளிக்கும் பண்பை பெறுவதோடு மிக எளிதில் சாதிக்கும் வல்லமையைப்பெறுகிறான். இதற்க்கு ஒரு உதாரணம்தான் இந்த பதிவு.

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூ...ர...மோ.... அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "குவளையில் உள்ள தண்ணீரை அந்த கையடிக் குழாய் / பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் குவளையில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்." 

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !
 நன்றி .... நட்புடன் கோகி-ரேடியோ மார்கோனி.

Monday, April 29, 2019

வலைப்பதிவு வரையும்பயிற்சி-1 வலைப்பதிவு எழுதுவது எப்படி?

பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்போம்.

வலைப்பதிவு வரையும்பயிற்சி-1  

வலைப்பதிவு எழுதுவது எப்படி?
வலைப்பதிவு என்றால் , பிலாக் , அதாவது ஆங்கில மூலச்சொல்லான வெப்லாக் என்பதன் சுருக்கம் என்பதே பொதுவாக சொல்லப்படும் விளக்கம். இணையத்தில் டயரி போல எழுதுவதற்கான வலை வசதியை தான் இப்படி சொல்கிறார்கள். அந்த வகையில் இணைய டயரி அல்லது வலை குறிப்பு என்று சொல்லாம். வலைப்பதிவுக்கு பல வடிவங்களும் தோற்றங்களும் உண்டு என்றாலும் , வலைப்பதிவின் பொதுவான அம்சம் , குறிப்புகள் தேதி வரிசையில் தலைகீழாக அமைந்திருக்கும். அதாவது புதிதாக எழுதிய குறிப்பு முதலில் இருக்கும். கடந்த பதிவுகள் அவை வெளியான தேதி படி வரிசையாக இடம்பெற்றிருக்கும்.
இந்த குறிப்புகளை தான் பதிவு என்கின்றனர். ஆங்கிலத்தில் போஸ்ட். இந்த போஸ்ட் தான் வலைப்பதிவின் முக்கிய அம்சம். அது பற்றி வரும் பாடங்களில் பார்க்கலாம். நாங்களும் இன்று போஸ்ட் போட்டாச்சா என்று கேட்டு ஊக்கம் அளிப்போம்.
இப்போது மீண்டும் வலைப்பதிவுக்கு வருவோம். வலைப்பதிவு என்றால் வெப்லாக் அல்லது பிலாக். தமிழில் இன்னொரு பெயர் வலைப்பூ. சரி, வலைப்பதிவுக்கும் இணையதளங்களுக்கும் என்ன வித்தியாசம்? இணையதளங்களை உருவாக்க வேண்டும். அதற்கு கோடிங் , புரோகிராமிங் போன்றவை தேவை. எச்.டி.எம்.எல் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் வலைப்பதிவு அப்படி இல்லை. அவற்றை ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ளனர். நமக்கான வலைப்பதிவை பதிவு செய்து கொண்டு டயரி எழுதுவது போல பதிவிடத்துவங்கிவிடலாம். கோடிங் வேண்டாம். எச்.டி.எம்.எல் வேண்டாம்.

இரண்டாவதாக இணையதளங்களுக்கு அவற்றின் தேவை மற்றும் நோக்கத்திற்கு ஏற்ப விதவிதமான வடிவமைப்புகள் இருக்கலாம். வலைப்பதிவுகளிலும் விதவிதமான வடிவமைப்புகள் உண்டு என்றாலும் அடிப்படையில் அவற்றின் அமைப்பு ஒன்று தான். ஆரம்பத்தில் சொன்னது போல, தேதி அடிப்படையில் தலைகீழ் வரிசையில் பதிவுகள் வெளியாகி கொண்டே இருக்கும். இந்த எளிமை தான் வலைப்பதிவின் ஆதார அம்சம் . அதன் பலமும் கூட.

வலைப்பதிவை டயரி போல பயன்படுத்தலாம். ஆனால் அது வெறும் டயரி மட்டும் அல்ல. அது ஒரு வெளியீட்டு சாதனமும் கூட. மற்றவர்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான இணைய களமாக வலைப்பதிவுகள் இருக்கின்றன. இந்த வெளியீட்டு தன்மையே வலைப்பதிவுகளின் வீச்சையும் பயன்பாட்டையும் விஸ்வரூபம் எடுக்க வைக்கின்றன. வலைப்பதிவை விட இணையத்தில் கருத்துக்களை சுலபமாக வெளியிடும் வழி வேறில்லை . இன்று பேஸ்புக் போன்ற சமூக தளங்கள் இந்த பெருமைக்கும் போட்டியிட்டாலும் , கருத்துக்களை வெளியிடுவதை முதலில் ஜனநாயகமயமாக்கி அனைவருக்கும் எளிதாக்கி தந்தது வலைப்பதிவுகள் தான்.

திரைப்பட விமர்சனமா ? பத்திரிகை விமர்சகர் தான் எழுத முடியுமா ? என்ன ? படம் பார்க்கும் சாமான்ய வாசகரும் தான் விமர்சனம் எழுதலாம். வலைப்பதிவுகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்தன. அதே போல அரசியல் விமர்சனமும் சாமான்யர்கள் செய்யலாம். கதை ,கவிதை வெளியிட்டுக்கொள்ளலாம். கட்டுரைகள் எழுதலாம். சுய அனுபவத்தை எழுதலாம். சொந்த சிந்தனைகளை பதிவு செய்யலாம். நுகர்வோராக போர்க்கொடி தூக்கலாம்.

இந்த வெளியீட்டு தன்மையே வலைப்பதிவுகளை பலரும் விரும்ப வைத்துள்ளது. சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.வராலாறு எழுதலாம்.

ஆனால் வலைப்பதிவு வெளியீட்டு சாதனம் மட்டும் அல்ல, அவை உரையாடலுக்கானவை. வலைப்பதிவு மூலம் நீங்கள் மற்றவர்களோடு தொடர்பு கொண்டு உரையாடலாம். இந்த உரையாடல் ஒரு துடிப்பான இணைய சமூகமாக உருவாகலாம். அது மட்டுமே வலைப்பதிவு , உங்களுடனான உரையாடலையும் சாத்தியமாக்கும் சாதனம். வலைப்பதிவை சுய தேடலுக்கு பயன்படுத்தலாம். ஒருவர் தன்னைத்தானே ஒருங்கிணைத்து கொள்ள வலைப்பதிவை பயனப்டுத்திக்கொள்ளலாம். வலைப்பதிவை பகிர்வு நோக்கில்லாமல் சுய குறிப்புகளாகவும் பயன்படுத்தலாம். இன்னுமு எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம்.

அவற்றை எல்லாம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
முதலில் நீங்கள் ஒரு கூகுள் மின்னஞ்சல் (Start with Google E-Mail ஈ மெயில்) கணக்கு துவங்கவேண்டும்.

அதன் பிறகு கூகுள் ஈமெயில் திறந்து கீழ் காணும் படத்தை பாருங்கள் 
படத்தில் இருப்பது போல சிகப்பு வட்டமிட்ட இடத்தில் தொலைப்பேசி எண்களைப்போல 9 புள்ளிகள் இருக்கும் 

அந்த இடத்தை கிளிக் செய்யுங்கள் 


மேலே உள்ள படத்தை போல அதில் சிகப்பு வட்டம் போட்டுள்ள 
BLOGGER

MORE
என்ற இரண்டு குறியீட்டுள்ள பகுதியை பாருங்கள் 

BLOGGER இல்லை என்றால், கீழை இருக்கும் MORE என்ற குறியை கிளிக் செய்து அதன்பிறகு BLOGGER ஐ தேடி கண்டுபிடித்து அதை கிளிக் செய்யவும் 


மேலே உள்ளதைப்போல CREATE A NEW BLOG என ஒரு பகுதி வரும் 
முதலில் உங்களின் வலைப்பதிவுக்கான தலைப்பை தேர்ந்தெடுக்கவும் அதை TITLE என்கிற இடத்தில் எழுதுங்கள் 

தமிழில் எழுத கீழை கண்டா கூகுளை தமிழ் translation பக்கத்தில் தமிழில் எழுதி அதை கட் செய்து தலைப்பை ஓட்டலாம்.



நான் கட் செய்து ஒட்டிய தமிழ் தலைப்பை கீழே படத்தில் பார்க்கவும்

ADDRESS இடத்தில் ஆங்கிலத்தில் இனைய முகவரியை தரவேண்டும்

நீங்கள் குறிப்பிட்ட உங்களின் இனைய விலாசம் வேறு ஒருவர் பயன்பாட்டில் இருந்தால் அது உங்களுக்கு கிடைக்காது சிகப்பு குறி அதை சுட்டிக்காட்டும்

எந்த தலைப்பில் பெயரில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது அதையே பயன்படுத்தலாம்

நமது வலைப்பக்கத்தில் பெயர்:- "வண்ணமிகு வானவில் வலைப்பதிவு வரையும்பயிற்சி" அதாவது "V.V.V.TRAINING"

இந்த நமது வலைப்பதிவின் முகவரி இது 
VVVTRAINING. BLOGSPOT.COM
https://vvvtraining.blogspot.com/


கீழை கண்ட தலைப்பில் நீலநிற டிக் மார்க் வந்தால் கிடைத்துவிட்டது என்பதாக பொருள் பிறகு CREATE என்ற பொத்தானை அழுத்தி உங்களின் புதிய வலைப்பதிவை தொடங்கலாம் கீழ் கண்டா படத்தில் பாருங்கள்

இப்போது தீம் THEME என்கிற உங்களின் வலைப்பதிவுக்கான முகப்பு பக்கத்தை தேர்வு செய்யவேண்டும் மேலே உள்ள படத்தில் SIMPLE என்பதை நான் தேர்வு செய்திருப்பதை போல 

பிறகு CREAT BLOG என்கிற பொத்தானை அழுத்துங்கள் 

பிறகு கீழ்க்கண்ட பகுதியை படத்தை காணலாம் 

GOOGLE DOMAIN என்பது நமது பெயரில் நாம் வாங்கும் இணையதள முகவரியாகும் அதற்க்கு பணம் தந்து வாங்கவேண்டும்.

ஆகவே இலவசமாக வலைப்பதிவு வைத்திருக்க "NO-THANKS" வேண்டாம் என்ற பொத்தானை அழுத்தி அடுத்த பகுதிக்கு செல்லுங்கள்.


மேற்கண்ட படத்தில் உள்ளதைப்போன்று புது வலைப்பதிவு பக்கம் உருவாகிவிட்ட பகுதிக்கு நாம் வருவோம் 

இப்போது நீங்கள் படத்தில் உள்ள NEW POST என்கிற பொத்தானை அழுத்தி
கீழ் கண்டா படத்தை போன்ற ஒரு பகுதிக்கு சென்று 


உங்களுக்கு விருப்பமான பதிவுகளை எழுதி SAVE செய்து வைத்து அனைத்து பதிவு வேலைகளும் முடிந்ததும் PUBLISH என்கிற பொத்தானை அழுத்தினாள் அனைவருக்கும் உங்களது இனைய வலைதளப்பாக்கம் பார்வைக்கு வந்துவிடும்.

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களது வலைப்பதிவு முகவரியை பயன்படுத்தி உங்களது பதிவை நீங்களும் பார்க்கலாம் அல்லது வேறு ஊரில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் உங்களது நண்பருக்கும் உங்களது இனைய முகவரியை அனுப்பி நீங்கள் எழுதிய வலைப்பதிவுகளை பார்க்க செய்யலாம் 

மேற்கண்ட வழிகள் அனைத்தும் ஒரு முறை மட்டுமே செய்யவேண்டும் . 

தொடர்ந்து நீங்கள் செய்யும் பதிவுகளுக்கு ஒவ்வொரு முறையும் நீங்கள் படத்தில் உள்ள NEW POST என்கிற பொத்தானை அழுத்தி தொடர்ந்து பதிவுகளை எழுதலாம்

அடுத்த பகுதியில் எப்படி வலைப்பதிவை செய்வது, நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு புகைப்படங்களை எப்படி நிறுவுவது என்பன போன்ற விவரங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம் 

மேலும் உங்களது சந்தேகங்களை GOOGLE PLUS+ என்கிற கீழை கண்டா பக்கத்தில் குறிப்பிடுங்கள்
இங்கே கிளிக் செய்து https://plus.google.com/u/0/communities/102493832630871987544
கீழை இருக்கும் படத்தில் இருக்கும் GOOGLE PLUS+ பகுதிக்கு செல்லலாம் 
மீண்டும் அடுத்த பயிற்சி பாட பதிவில் சிந்திப்போம் 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

Thursday, April 25, 2019

திடீரென்ற விலை அதிகரிப்புகளை எவ்வாறு சமாளித்து தீர்வை எட்ட வேண்டும்: -(How To Negotiate, The Sudden Price Increases)

பொருட்கள் மற்றும் தளவாட மேலாண்மையில் மேம்பட்ட பயிற்சி :-(Advanced Course in Materials & Logistics Management.):-

தளவாட மேலாண்மை பற்றிய மேலும் பல விவரங்களுக்கு Please visit more Logistics Management postings at my site "www.iuba-india.com"

திடீரென்ற விலை அதிகரிப்புகளை எவ்வாறு சமாளித்து தீர்வை எட்ட வேண்டும்: -(How To Negotiate, The Sudden Price Increases)

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் வந்தாலே பொருட்கள் தயாரிப்பாளர்களோ அல்லது விநியோகஸ்தர்களோ (சப்ளையர்) அல்லது சேவை வழங்குபவர்களோ, அனைவரும் அவர்களது விலையை அதிகரிப்பு செய்துவிடுகிறார்கள். எனவே பொருட்களையும் சேவையையும் பயன்படுத்துபவர்கள் அல்லது கொள்முதல் செய்பவர்கள் இந்த தீடிரென்ற விலைஉயர்வை சமாளிக்கமுடியாமலும் உரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தி விலைஉயர்வை தவிர்ப்பது எப்படி என்பது தெரியாமல் அவர்களுக்குத் தேவையான பொருளோ சேவையோ கிடைக்காமல் தோல்வியை சந்திக்கிறார்கள். 

விலை உயர்வை சமாளிக்கவும் அதோடு விலைஉயர்வை தடுக்கவும்  நீங்கள் எப்படி பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்? மேலும் விலை உயர்வு பற்றி பேச்சுவார்த்தையை நீங்கள் எப்போது எப்படி தொடங்க வேண்டும்? 

அந்த இரண்டாவது கேள்விக்கான பதில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். நீங்கள் முதலில் தற்போதைய விலையை பெற்றபோது விலை அதிகரிப்பை தடுக்க தேவையான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகிவிட்டீர்கள் என்றால், எப்படி பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும்? என்று இப்போது பார்க்கலாம். விலை உயர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்கு முன்பாக நாம் முதலில் பொருள் அல்லது சேவை வழங்குபவரிடம் விலைஉயர்விற்கான அடிப்படை காரணமான "கட்டண செலவுப் படிகள்/பட்டியல் " (Cost breakdown report) விவரங்களைப்பெறவேண்டும். "செலவுப் படிகள்-விவரம்" என்றால் என்ன? 

மேற்கண்டவற்றை எப்படி என நான் விரிவாக எடுத்துரைப்பதற்கு முன்பாக, பொருள் அல்லது சேவை வழங்குபவரின் கூற்றான "அலுமினியம் விலைகள் கடந்த ஆண்டு 28% சதவிகிதம் உயர்ந்துவிட்டன, எனவே நாங்கள் உங்களுக்கு வழங்கும் பொருள் அல்லது சேவையை 28% சதவீதம் உயர்த்துவது என முடிவாகியுள்ளது" என்பதை ஏற்றுக்கொள்ள தயாராகவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுவதை நாம் நமது நினைவில் வைக்கவேண்டும். 

திடீரென்ற விலைஉயர்வை ஏற்க நீங்கள் (நிறுவனம்) தயாராக இல்லை என்றால், பொருள் அல்லது சேவை கிடைக்காமல் அந்த கட்டத்தில் கடுமையான விளைவுகளை உங்கள் நிறுவனத்திற்கு ஏற்படுத்தும் எனவே, உயர் வருடாந்திர-செலவின தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கான மேற்கோள்களை முதலில் பெறுகையில், சப்ளையர்கள்(விநியோகத்தினர்களின்) செலவீன குறைப்புக்களை கேட்க முயற்சி மேற்கொள்ளலாம்.

முதன்முதலில், சப்ளையர் விலையில் இருந்து விலையை வாங்கும்போது, அந்த கட்டண செலவு படிகளின் விவரம் கிடைக்கும். சப்ளையர்கள் இத்தகைய தகவலை நேரடியாக உங்களோடு பகிர்ந்து கொள்ள தயங்கலாம், ஆனால் உங்கள் வணிகத்திற்காக போட்டியிடும் போது பொதுவாக அதிக விருப்பம் கொண்டு இதற்க்கு சம்மதிக்கலாம், ஆகவே அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

ஒவ்வொரு முக்கிய பொருள், பிற பொருட்கள், உழைப்பு, மேல்நிலை மற்றும் இலாபம் ஆகியவற்றைக் கொண்ட மொத்த செலவுகளின் சதவீதத்தை ஒரு கட்டண செலவு படிகள்(Cost breakdown report) காண்பிக்கும். உதாரணமாக, செலவு படிகள் அல்லது பட்டியல்கள் இதுபோல் இருக்கலாம்:

(வூட்) மரம் = 20%,
அலுமினியம் = 7%,
மற்ற பொருட்கள் = 3%,
மேல்நிலை செலவு = 13%,
தொழிலாளர் செலவு = 45%,
தயாரிப்பாளரின் லாபம் = 12%

மேற்கண்ட பட்டியல் ஒரு சப்ளையர் விலை உயர்வை முன்மொழிகிறது மற்றும் மேலே உள்ள பட்டியல் வகை நியாயத்தை பயன்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால், "அலுமினியம் 28% அதிகரித்துள்ளது, ஆனால் அலுமினியம் மட்டுமே உங்கள் விலையில் வெறும் 7% சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. ஆகவே உங்கள் விலை 2% வரை மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கவேண்டும். "

அதோடு சப்ளையர் நிறுவன தயாரிப்பில், உங்களது நிறுவனம் வெறும் 10% பொருட்களை/சேவையை மட்டுமே பெறுகிறது எனக்கொண்டாள் மீதமிருக்கும் 90% சதவீத தயாரிப்பு பொருட்கள்/சேவைகள் வெவ்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதால் அதற்கும் சேர்த்து விலை அதிகரிப்பிற்காக உங்கள் நிறுவனம் பொறுப்பேற்கவேண்டியதில்லை.    

அப்படியென்றால் நீங்கள் அதோடு அங்கு பேச்சுவார்த்தைகளை நிறுத்த வேண்டுமா?  இல்லை! மேலும் பல விவரங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். 

மேலும் சிறிய உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு உழைப்புச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் வாதிடலாம். பொருட்களின் விலையை உயர்த்துவதை விடவும், உங்கள் விலை குறையாமல் கொள்முதல் செய்யப்போகும் அளவுக்கு உற்பத்தியை அதிகரிப்பதாக சப்ளயருக்கு நம்பிக்கையூட்டவேண்டும்!.


மேற்கண்ட உதாரணத்திலிருந்து நீங்க தெரிந்துகொள்ளவேண்டியது, அடுத்தமுறை விலையை உயர்த்துகிறோம் என்று உங்களுக்கு பொருட்கள் அல்லது சேவை வழங்கும் நிறுவனம் கூறினால் மேற்கண்டவாறு அந்த சப்ளையர் நிறுவனத்திடமிருந்து கட்டண செலவுப் படிகளின் விவரங்களை கேட்டு அதர்கேற்றபடி அவர்களிடம் பேசி சமாளித்து சிறப்பான ஒரு தீர்வை எட்ட வேண்டும்.

மீண்டும் அடுத்தப்பதிவில் சந்திப்போமா?
நன்றிகளுடன்,
கோகி -ரேடியோ மார்கோனி.




பொருட்கள் மற்றும் தளவாட மேலாண்மையில் மேம்பட்ட பயிற்சி :-Advanced Course in Materials & Logistics Management.:-

How To Negotiate, The Sudden Price Increases:- திடீரென்ற விலை அதிகரிப்புகளை எவ்வாறு சமாளித்து தீர்வை எட்ட வேண்டும்: -

January is a common time for supplier price increases. So, today, purchasers are trying, perhaps unsuccessfully, to negotiate those price increases away.

How do you negotiate price increases? Better yet, when should you begin preparing to negotiate price increases?

The answer to that second question may surprise you. You should have begun preparing to negotiate a price increase when you originally obtained the current price.

Before I elaborate, consider a typical supplier justification like “We must raise your price by 28% because aluminum costs went up 28% last year.”

That point is tough to argue if you’re not prepared. So, when first obtaining quotes for high-annual-spend products or services, ask for suppliers’ cost breakdowns.

A cost breakdown will indicate the percentage of the total cost that is comprised by each major material, other materials, labor, overhead, and profit. For example, a cost breakdown may look like this:

Wood = 20%, 
Aluminum = 7%, 
Other materials = 3%, 
Overhead = 13%, 
Labor = 45%,
Profit = 12%

If a supplier proposes a price increase and tries to use the above type of justification, you can say something like: “Aluminum increased by 28%, but aluminum only comprises 7% of your price. Considering nothing else, your price should only go up by 2%.”

Should you stop negotiating there? Heck no!

You can argue that productivity gains should have reduced labor costs enough to offset the small materials price increase. Maybe you can even convince the supplier that productivity gains more than offset the materials price hike and that your price should go down!

The key is to get that cost breakdown when you first obtain pricing from a supplier. Suppliers can be hesitant to share such information at times, but are usually more willing when they are competing for your business.

We'll meet again on my next posting.
Until than, Thanks & Regards,
Gopal Krishnan-Radio Marconi.


எதிலும் எப்போதும் "ஒரு படி முன்னே....!!!!"

எதிலும் எப்போதும் "ஒரு படி முன்னே....!!!!"  
வனங்களில் விறகு சேகரித்து வயிற்றைக் கழுவி வந்த அந்த மனிதனின் எதிரே ஒரு முனிவர் வந்தார். 

“இன்னும் முன்னால் போ” என்றார்." 

போன இடத்தில் நிறைய சந்தனக் கட்டைகள் கிடைத்தன. அவற்றை விற்றதில் காசு நிறைய கிடைத்தது. 

மீண்டும் அந்த முனிவர் எதிரே வந்தார். 

“இன்னும் முன்னால் போ” என்றார். 

இப்போது நிறைய சுரங்கங்கள் தட்டுப்பட்டன. அவற்றை அள்ளிச் சென்று பெரும் செல்வந்தனாக மாறினான். 

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி! உங்களை முன்னேற்றப் போகிற முத்திரை வாசகம்….. 

“இன்னும் முன்னால் போ” என்பதுதான்!!  (என்றும் நட்புடன்.....கோகி)