TRAIN THE TRAINER (TAMIL) பயிற்சியாளர் பயிற்சி பட்டறை : March 2019

GOOGLE-1

Saturday, March 30, 2019

ஒருநாள் என்பது நமக்கு 30மணி நேரம் ஆனால் மற்றவர்களுக்கு வெறும் 24 மணி நேரம் மட்டுமே. அது எப்படி???

ஹலோ சுட்டீஸ் இனிய மாலை வணக்கம்,

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-19*
*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-4*  

ஒருநாள் என்பது நமக்கு 30மணி நேரம் ஆனால் மற்றவர்களுக்கு வெறும் 24 மணி நேரம் மட்டுமே. அது எப்படி என்று அந்த விளையாட்டை விளையாடி தெரிந்துகொள்வோமா?. 

வேகமாக இயங்கும் இயந்திர உலகில் ஒருநாள் என்பது ஆரம்பித்ததுமே முடிந்துவிடுவது போல உள்ளது. இன்றைக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பார்கள். இன்று திட்டமிடவே பாதி நாட்கள் போய் விடுகிறது என்று கூறுபவர்களும் உள்ளனர்.
ஆனால், அதே நேரத்தில் ஒரு நாளை சிறப்பாக கையாளும் ஆளுமை திறன் கொண்டவர்களும் உள்ளனர். ஒரு நாளில் எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும்? எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்படுபவர்களும் உள்ளனர். அவர்களது ஒருநாள் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

புல்லட் ட்ரெயினாய் பறக்கும் நேரத்தை யாராலும் நிறுத்தி வைக்கமுடியாது. ஆனால் அந்த நேரத்தை குறித்து அலர்ட்டாக இருந்தால் டன் கணக்கில் சாதிக்கலாமே! நம் மூளை, காலத்தை எப்படி புரிந்துகொள்கிறது,  நேரத்தை எப்படி உணர்ச்சிகள் உறிஞ்சுகின்றன, நேரத்தினை குறைத்து மகிழ்ச்சியான வாழ்வை அதிகப்படுத்துவது எப்படி என சொல்லித்தரும் ரைமிங் அண்ட் சூப்பர் டைமிங் விளையாட்டுத்தான் இந்த பயிற்சி விளையாட்டு.

நேரத்தை ரசித்து ருசித்து அனுபவிக்கும்போது அதன் அருமை புரியும்:-

பாடல் :- நிலாக் காய்கிறது, நிறம் தேய்கிறது, யாரும் ரசிக்கவில்லையே ....இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்....
  
பாடல் {....இன்னும் கொஞ்சநேரம் இருந்தாதான் என்ன? ஏன் அவசரம் என்ன அவசரம்.. நில்லு கண்ணே...}

பயிற்சி விளையாட்டு:- கேட்கப்படும் கேள்விக்கு ஒரு நிமிட நேரத்திற்குள் பதிலளிக்கவேண்டும். தவறான பதிலுக்கு உங்களுக்கு தரப்பட்ட நேரத்திலிருந்து இரண்டு (2) நிமிடம் கழிக்கப்படும். சரியான விடையையும் அதை ஒரு நிமிடத்திற்கு முன்னதாக கூறினால் மேலும் ஒரு நிமிடம் உங்களது கணக்கில் சேர்க்கப்படும். பதில் தெரியாவிட்டால் பாஸ் என்று கூறியோ அல்லது அமைதியாக இருந்து அந்த ஒரு நிமிடத்தை செலவு செய்து தப்பித்துக்கொள்ளலாம்.  இப்போது பயிற்சி விளையாட்டை விளையாடலாம் வாங்க.

இந்த விளையாட்டில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டியது தவறான பதிலை கூறி அதிக நேரத்தை இழக்கக்கூடாது. விடை தெரியவில்லை என்றால் அமைதி காத்து ஒரு நிமிட நேரத்தை செலவு செய்து தப்பித்துக்கொள்ளலாம். விடை தெரிந்தால் உடனே ஒரு நிமிடத்திற்குள் கூறி மேலும் ஒரு நிமிட நேரத்தை சேமிக்கலாம். ஆகவே இந்த விவரங்களை நன்கு நினைவில் வைத்திருந்தாலே நேரத்தை சேமித்து வெற்றிபெறலாம். சரிதானே சுட்டீஸ் நீங்களும் இந்த விளையாட்டும் விளையாடிப்பாருங்கள். நீங்கள் எத்தனை மணித்துளிகளை சேமித்தீர்கள் என்று கணக்கிட்டு வெற்றிபெறுங்கள். 

உங்களின் வாழ்க்கையின் வெற்றி வாய்ப்பிற்கு கீழ்கண்டவைகளை உங்களின் கவனத்தில் வையுங்கள் எதிர்காலத்திற்கு உங்களுக்கு பயன்படும்.  ஒரு தொழிற்ச்சாலையின், ஒரு நாளின் 24மணி நேர உற்பத்தியை, அதே 24மணி நேரத்தில் (ஒருநாளின்) 30மணிநேர உற்பத்தியாக்கி(அதாவது ஒவொரு 8 மணி நேரத்தில், 10 மணி நேர உற்பத்தி = 2 மணி நேர கூடுதல் உற்பத்தி 3shift x 8+2 =30Hrs)-லாபத்தை செயலில் செய்து காட்டிவிட்டால் எப்படிப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் அசந்து போவார்கள்" அப்படி அந்த தொழிற்ச்சாலையில் பணிபுரியும் பலரது  ஒருநாளாய 6 மணி நேரத்திற்கான சம்பளத்தை ஒரு பெரிய தொழிற்சாலைக்கு மிச்சமாககுகிறீர்கள் என்றால் ஒரு மாதத்தில் அந்த தொகையானது ஒரு பெரிய தொகையாகவே இருக்கும்.  "நேரத்தை, ஆற்றலை, பணத்தை  மிச்சப்படுத்துவதுடன்,  இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கும் புரியும்"

உதாரணமாக அறிவியல் முறை வேலை நேரம் என்பார்கள். ஒருவர் ஒரு நாளின் வேலை நேரமான 8 மணி நேரத்தில், 100 வாகன டயர்களை பொருந்துகிறார் என்றால், அவருக்கு அந்த வேலை பழக பழக அவர் மேலும் அதிவேகமாக அவரின் வேலையை செய்வார் ஆகவே அவர் 100 வாகன டயர்களை பொருத்தும் வேலையை 6மணி நேரத்திலேயே முடித்துவிடுவார் அல்லது அவரது 8 மணி நேர வேளையில் 125 வாகன டயர்களை பொருத்தியிருப்பார். அதாவது 25 டயர்கள் பொருத்தும் வேலையை அதிகமாக செய்திருப்பார். 

ஆகவே 8 மணி நேர வேலையை நேரத்தை சேமித்து 6 மணி நேரத்திலேயே முடித்துவிடுவார். அல்லது மேலும் 2 மணி நேர அதிக அளவிலான உற்பத்தியை செய்திருப்பார்.  

சுட்டீஸ் இது உங்கள் வீட்டில் வேலைக்கு போகும் உங்களது பெற்றோர்களான அப்பா அம்மா அவர்களுக்கு இந்த உதாரணத்தை எடுத்து சொல்லுங்கள் எப்போதும் அலுவலகம் வேலை என்று உங்களை கவனிக்காமல் உங்களோடு வீட்டில் சந்தோசமாக நேரத்தை செலவு செய்ய தெரியாத உங்களது பெற்றோர்களுக்கு நீங்கள்தான் விவரமாக எடுத்து கூறவேண்டும்... "என் பாசத்திற்குரிய அப்பா அல்லது அம்மா, முதலில் நீங்கள் உங்களது அலுவலகத்தில் உங்களது வேலை எது என்று நன்கு தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு நேரத்தை மிச்சம் பிடித்து அந்த நேரத்தில் உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் உங்களது குடும்பம், பிள்ளைகள்  சார்ந்த பணிகளை செய்தால் தான் எனது பெற்றோர்களான நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு  முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் எங்களுக்கும் உங்களோடு விளையாட நேரம் ஒதுக்கவேண்டும் என்று கூறுங்கள்.

உதாரணமாக ஒருவரின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் சொந்த குடும்பத்திற்காகவும் அதோடு உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம்  என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய மகிழ்ச்சியான நேரமாக"அப்பாவின் நேரமாக", உங்களின் குடும்ப உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு  6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு  6 மணி  = 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது உங்களுக்கு பணம்பழம போன்ற நெல்லிக்கனி" புரிகிறதா? என்ன சுட்டீஸ், நீங்கள்தான் இந்த உதாரணங்களைக் கூறி உங்களின் பெற்றோர்களிடம் கேட்கவேண்டும். 


@"எனக்குமட்டும் யோசிக்க இன்னும் சிறிது நேரம் தாருங்கள், மேலும் சிறப்பாக செய்யமுடியும் என்றேன்" 

"அதை சரியாக புறிந்துகொள்ளாத நிறுவனத்தின் உரிமையாளர் "வேலையை விட்டுவிட்டு உன் வீட்டிற்கு சென்று உட்கார்ந்து யோசி என்றார்" 

எனக்கு வந்த கோபத்தை செயலில் காட்டினேன்... 

அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு புரியும் படி ஒரு நாளின் 24மணி நேர உற்பத்தியை, அதே 24மணி நேரத்தில் (ஒருநாளின்) 30மணிநேர உற்பத்தியாக்கி(அதாவது ஒவொரு 8 மணி நேரத்தில், 10 மணி நேர உற்பத்தி = 2 மணி நேர கூடுதல் உற்பத்தி (3shift x 8+2 =30Hrs)-லாபத்தை செயலில் செய்து காட்டியபோது அசந்த்துபோனார்கள்" 

நான் அவர்களிடம் சொன்னது..... "நிறுவனம் எனக்கு சம்பளம் தரவில்லை நான்தான் நிறுவனத்திற்கு தருகிறேன் என்றேன் (Contribute to Company) ", அதோடு நான்மட்டுமில்லாமல் என்னுடைய குழுவினரும் கூட அப்படித்தான் என்றேன்....... 

"நேரத்தை மிச்சப்படுத்துவதுடன்,  இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கும் புரியும்" கோகி....  

Received an Award -"Double the volume of Business-2002”  

ஆக்ரோஷமான இரட்டிப்பு வியாபார  யுக்தி விருது-2002 (கோகி.....) 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

*முன்னோட்டம்*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-20*
*(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2* 

@அந்த ஒரு பொருள் "சொர்க்கத்தில்" மட்டுமே கிடைக்கும் என்றால், அந்தப் பொருளை கொண்டுவருவதர்க்காக சொர்க்கத்துக்கு போயிட்டு வரலாம் வாரீங்களா!!!!.....

@அந்த ஒரு பொருள் "சொர்க்கத்தில்" மட்டுமே கிடைக்கும் என்றால், அந்தப் பொருளை கொண்டுவருவதர்க்காக சொர்க்கத்துக்கு போயிட்டு வரலாம் வாரீங்களா!!!!..... 
சென்றவாரம் நமது  பயிற்சியாளர்களின் பயிற்சிப்பட்டறை வாட்சப் குழுவில் நான் கேட்டிருந்த கேள்விக்கான பதில் இது.

Episode-110. இன்றைய நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? 

It wan an interview question… “A Things/materials is most important for our Project work. But that materials is available only in “Heaven”… How to get it that materials from Heaven? and how to complete the project work? First you explain us what is your answer for this question, and how you will be getting such things from Heaven?    

ஒரு நிருவனத்தின் வேலைவாய்ப்பு நேர்காணலின்போது கேட்கப்பட்ட கேள்வி அது? 

நமது திட்டப்பணிக்கு உடனடியாக தேவைப்படும் அந்த ஒரு பொருள் "சொர்க்கத்தில்" மட்டுமே கிடைக்கும் என்றால், அந்தப் பொருளை கொண்டுவருவதர்க்கான சாதனையை நீங்கள் செய்யவேண்டிய சூழலில், உங்களின் பதில் என்ன? என்ன செய்வீர்கள்?. எப்படி கொண்டுவருவீர்கள்? முதலில் இந்த கேள்விக்கான பதிலைக்கூருங்கள் என்றனர்? 

அது ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூருக்கு  அருகேயுள்ள  தார்ப்பாலைவனத்தில் (  இந்தியாவில் இருக்கும்  தார்ப்பாலைவனத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 200,000 km2 ஆகும்) அமையவிருக்கும் ஒரு பெரிய காற்றாலை மின் உற்பத்தி மற்றும்  சூரிய ஆற்றலை மின்சக்தியாக மாற்றி பெறக்கூடிய நிறுவனத்தின் திட்டப்பணியை மேற்கொள்ள திட்ட மேலாளருக்கான்(Project Manager) நேர்காணல் தேர்வின்போதுதான் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது .  காரணம் திட்டப்பணி நடக்கவிருக்கும்  அந்த தார்ப்பாளைவனத்தில் சரியான சாலை வசதிகூட கிடையாது அப்படிப்பட்ட சவாலான பணியை ஏற்று செய்யக்கூடிய திட்ட மேலாளருக்கு எத்தகைய சூழலையும்  எதிர்கொண்டு சமாளிக்கும் திறமை இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தனர்.  

சாதிக்க குறிப்பிட்ட எல்லை என்று ஏதுமில்லை. உங்களின் சாதனையை பிறர் பயன்படுத்திக்கொண்டால் அதற்காக நீங்கள், வருத்தப்படவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு உங்களின் சாதனையை பயன்படுத்திக்கொள்ளமுடியுமே  தவிர, அவர்களால் சாதிக்கமுடியாது. ஆகவே சாதிக்க, சாமர்த்தியமும் மிக மிக முக்கியம். அதோடு அந்த அந்த நேர, கால, இடத்திற்கு ஏற்றார்போல, சமயோசிதமாகவும் சாமர்த்தியமாகவும் பதில் சொல்ல தெரிந்திருக்கவேண்டும்.  

உங்களின் பதில் "ஆம்/ முடியும்" என்று கூறுவீர்களானால், முதலில் ஒரு சில விவரங்களை நன்கு ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும். அதாவது 

சொர்க்கம் அது எங்கிருக்கிறது? 

எப்படி அங்கு செல்லமுடியும்? 

புராணங்களில் மனிதனின் இறப்பிற்கு பின்பு சொர்க்கம் செல்லலாம் என்று குறிப்பிட்டிருப்பதை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது. இறந்தபிறகு திரும்ப மனித உடலில் அதுவும் நமது அதே உடலுக்குள் திரும்ப முடியுமா? என்கிற பல கேள்விகளுக்கு விடையே இல்லை. அப்படிப்பட்ட சூழலில் உங்களின் பதில் சிறப்பானதாகவும், அந்த நேர, கால, இடத்திற்கு ஏற்றார்போல, சமயோசிதமாகவும், சாமர்த்தியமாகவும் பதில் சொல்ல தெரிந்திருக்கவேண்டியது அவசியம். 

சரி இப்போது இந்தக் கேள்விக்கான சாமர்த்தியமான பதில் என்ன என்று பார்ப்போம்?   

"நானே சென்று எடுத்துவருவதைவிட, யாரையாவது சொர்கத்திற்கு அனுப்பி எடுத்துவரச் செய்வேன் " என்று  சாமர்த்தியமாக பதில்கூறவேண்டும்.

மேலும் யாரும் பார்த்திராத அந்த பொருளை எடுத்துவருவது மிகவும் எளிது... நீங்கள் எந்த ஒரு புதுப் பொருளை எடுத்துவருகிரீர்களோ "அதுதான் அது", அதாவது சொர்கத்திலிருந்து பெறப்பட்ட பெருள் இதுதான் என்று எதோ ஒரு புதிய பொருளைக்காட்டி சாதித்துவிட்டாதாக கூறலாம். 

சந்தேகமிருந்தால் உடனே உங்களை சொர்கத்துக்கு அனுப்பி, இதை என்னால் நிருபிக்கமுடியும் என்று கூறினாலே போதும், யாரும் இதற்காக தங்களது உயிரை விட தயாராகமாட்டார்கள், ஆகவே உங்களது சாதனை ஏற்றுக்கொள்ளப்படும். .. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் .....

ஆகவே, எவர் ஒருவர் எந்த ஒரு கடினமான சாதனைகளையும் தமது குழுவினர்களைக்கொண்டு செய்து முடிக்கும் எண்ணம் உடையவராக, தனது குழுவினர்களை நிர்வகிக்கத்தெரிந்த மற்றும் குழுவினர்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவர்கள் மட்டுமே சிறந்த திட்ட மேலாளராக பணியாற்றத் தகுதிபெற்றவராவார். ஆகவே குழுவிலிருக்கும் ஒருவரை அனுப்பி "சொர்க்கத்தில்" இருக்கும் அந்த பொருளை நாம் எளிதாக பெற்றுவிடமுடியும் என்று கூறவேண்டும். அதேநேரம் உங்களின் குழுவிலிருந்து எவரையும் இழக்கவோ அல்லது  பணியிலிருந்து வெளியேற்றவோ கூடாது. ஆகவே அனைவரையும் அரவணைத்து செல்லவேண்டிய கட்டாய சூழலில் நீங்கள் இருப்பதையும் நினைவில் வைத்திருக்கவேண்டும். 

அடுத்த நேர்காணல் விளையாட்டை விளையாடலாமா? மீண்டும் நாளை சிந்திப்போம்...

விடாமல் முயலுங்கள்,
விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....
மீண்டும் சந்திப்போம்!...
வணக்கம்
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.