TRAIN THE TRAINER (TAMIL) பயிற்சியாளர் பயிற்சி பட்டறை : April 2019

GOOGLE-1

Monday, April 29, 2019

வலைப்பதிவு வரையும்பயிற்சி-1 வலைப்பதிவு எழுதுவது எப்படி?

பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்போம்.

வலைப்பதிவு வரையும்பயிற்சி-1  

வலைப்பதிவு எழுதுவது எப்படி?
வலைப்பதிவு என்றால் , பிலாக் , அதாவது ஆங்கில மூலச்சொல்லான வெப்லாக் என்பதன் சுருக்கம் என்பதே பொதுவாக சொல்லப்படும் விளக்கம். இணையத்தில் டயரி போல எழுதுவதற்கான வலை வசதியை தான் இப்படி சொல்கிறார்கள். அந்த வகையில் இணைய டயரி அல்லது வலை குறிப்பு என்று சொல்லாம். வலைப்பதிவுக்கு பல வடிவங்களும் தோற்றங்களும் உண்டு என்றாலும் , வலைப்பதிவின் பொதுவான அம்சம் , குறிப்புகள் தேதி வரிசையில் தலைகீழாக அமைந்திருக்கும். அதாவது புதிதாக எழுதிய குறிப்பு முதலில் இருக்கும். கடந்த பதிவுகள் அவை வெளியான தேதி படி வரிசையாக இடம்பெற்றிருக்கும்.
இந்த குறிப்புகளை தான் பதிவு என்கின்றனர். ஆங்கிலத்தில் போஸ்ட். இந்த போஸ்ட் தான் வலைப்பதிவின் முக்கிய அம்சம். அது பற்றி வரும் பாடங்களில் பார்க்கலாம். நாங்களும் இன்று போஸ்ட் போட்டாச்சா என்று கேட்டு ஊக்கம் அளிப்போம்.
இப்போது மீண்டும் வலைப்பதிவுக்கு வருவோம். வலைப்பதிவு என்றால் வெப்லாக் அல்லது பிலாக். தமிழில் இன்னொரு பெயர் வலைப்பூ. சரி, வலைப்பதிவுக்கும் இணையதளங்களுக்கும் என்ன வித்தியாசம்? இணையதளங்களை உருவாக்க வேண்டும். அதற்கு கோடிங் , புரோகிராமிங் போன்றவை தேவை. எச்.டி.எம்.எல் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் வலைப்பதிவு அப்படி இல்லை. அவற்றை ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ளனர். நமக்கான வலைப்பதிவை பதிவு செய்து கொண்டு டயரி எழுதுவது போல பதிவிடத்துவங்கிவிடலாம். கோடிங் வேண்டாம். எச்.டி.எம்.எல் வேண்டாம்.

இரண்டாவதாக இணையதளங்களுக்கு அவற்றின் தேவை மற்றும் நோக்கத்திற்கு ஏற்ப விதவிதமான வடிவமைப்புகள் இருக்கலாம். வலைப்பதிவுகளிலும் விதவிதமான வடிவமைப்புகள் உண்டு என்றாலும் அடிப்படையில் அவற்றின் அமைப்பு ஒன்று தான். ஆரம்பத்தில் சொன்னது போல, தேதி அடிப்படையில் தலைகீழ் வரிசையில் பதிவுகள் வெளியாகி கொண்டே இருக்கும். இந்த எளிமை தான் வலைப்பதிவின் ஆதார அம்சம் . அதன் பலமும் கூட.

வலைப்பதிவை டயரி போல பயன்படுத்தலாம். ஆனால் அது வெறும் டயரி மட்டும் அல்ல. அது ஒரு வெளியீட்டு சாதனமும் கூட. மற்றவர்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான இணைய களமாக வலைப்பதிவுகள் இருக்கின்றன. இந்த வெளியீட்டு தன்மையே வலைப்பதிவுகளின் வீச்சையும் பயன்பாட்டையும் விஸ்வரூபம் எடுக்க வைக்கின்றன. வலைப்பதிவை விட இணையத்தில் கருத்துக்களை சுலபமாக வெளியிடும் வழி வேறில்லை . இன்று பேஸ்புக் போன்ற சமூக தளங்கள் இந்த பெருமைக்கும் போட்டியிட்டாலும் , கருத்துக்களை வெளியிடுவதை முதலில் ஜனநாயகமயமாக்கி அனைவருக்கும் எளிதாக்கி தந்தது வலைப்பதிவுகள் தான்.

திரைப்பட விமர்சனமா ? பத்திரிகை விமர்சகர் தான் எழுத முடியுமா ? என்ன ? படம் பார்க்கும் சாமான்ய வாசகரும் தான் விமர்சனம் எழுதலாம். வலைப்பதிவுகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்தன. அதே போல அரசியல் விமர்சனமும் சாமான்யர்கள் செய்யலாம். கதை ,கவிதை வெளியிட்டுக்கொள்ளலாம். கட்டுரைகள் எழுதலாம். சுய அனுபவத்தை எழுதலாம். சொந்த சிந்தனைகளை பதிவு செய்யலாம். நுகர்வோராக போர்க்கொடி தூக்கலாம்.

இந்த வெளியீட்டு தன்மையே வலைப்பதிவுகளை பலரும் விரும்ப வைத்துள்ளது. சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.வராலாறு எழுதலாம்.

ஆனால் வலைப்பதிவு வெளியீட்டு சாதனம் மட்டும் அல்ல, அவை உரையாடலுக்கானவை. வலைப்பதிவு மூலம் நீங்கள் மற்றவர்களோடு தொடர்பு கொண்டு உரையாடலாம். இந்த உரையாடல் ஒரு துடிப்பான இணைய சமூகமாக உருவாகலாம். அது மட்டுமே வலைப்பதிவு , உங்களுடனான உரையாடலையும் சாத்தியமாக்கும் சாதனம். வலைப்பதிவை சுய தேடலுக்கு பயன்படுத்தலாம். ஒருவர் தன்னைத்தானே ஒருங்கிணைத்து கொள்ள வலைப்பதிவை பயனப்டுத்திக்கொள்ளலாம். வலைப்பதிவை பகிர்வு நோக்கில்லாமல் சுய குறிப்புகளாகவும் பயன்படுத்தலாம். இன்னுமு எத்தனையோ விதங்களில் பயன்படுத்தலாம்.

அவற்றை எல்லாம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
முதலில் நீங்கள் ஒரு கூகுள் மின்னஞ்சல் (Start with Google E-Mail ஈ மெயில்) கணக்கு துவங்கவேண்டும்.

அதன் பிறகு கூகுள் ஈமெயில் திறந்து கீழ் காணும் படத்தை பாருங்கள் 
படத்தில் இருப்பது போல சிகப்பு வட்டமிட்ட இடத்தில் தொலைப்பேசி எண்களைப்போல 9 புள்ளிகள் இருக்கும் 

அந்த இடத்தை கிளிக் செய்யுங்கள் 


மேலே உள்ள படத்தை போல அதில் சிகப்பு வட்டம் போட்டுள்ள 
BLOGGER

MORE
என்ற இரண்டு குறியீட்டுள்ள பகுதியை பாருங்கள் 

BLOGGER இல்லை என்றால், கீழை இருக்கும் MORE என்ற குறியை கிளிக் செய்து அதன்பிறகு BLOGGER ஐ தேடி கண்டுபிடித்து அதை கிளிக் செய்யவும் 


மேலே உள்ளதைப்போல CREATE A NEW BLOG என ஒரு பகுதி வரும் 
முதலில் உங்களின் வலைப்பதிவுக்கான தலைப்பை தேர்ந்தெடுக்கவும் அதை TITLE என்கிற இடத்தில் எழுதுங்கள் 

தமிழில் எழுத கீழை கண்டா கூகுளை தமிழ் translation பக்கத்தில் தமிழில் எழுதி அதை கட் செய்து தலைப்பை ஓட்டலாம்.



நான் கட் செய்து ஒட்டிய தமிழ் தலைப்பை கீழே படத்தில் பார்க்கவும்

ADDRESS இடத்தில் ஆங்கிலத்தில் இனைய முகவரியை தரவேண்டும்

நீங்கள் குறிப்பிட்ட உங்களின் இனைய விலாசம் வேறு ஒருவர் பயன்பாட்டில் இருந்தால் அது உங்களுக்கு கிடைக்காது சிகப்பு குறி அதை சுட்டிக்காட்டும்

எந்த தலைப்பில் பெயரில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது அதையே பயன்படுத்தலாம்

நமது வலைப்பக்கத்தில் பெயர்:- "வண்ணமிகு வானவில் வலைப்பதிவு வரையும்பயிற்சி" அதாவது "V.V.V.TRAINING"

இந்த நமது வலைப்பதிவின் முகவரி இது 
VVVTRAINING. BLOGSPOT.COM
https://vvvtraining.blogspot.com/


கீழை கண்ட தலைப்பில் நீலநிற டிக் மார்க் வந்தால் கிடைத்துவிட்டது என்பதாக பொருள் பிறகு CREATE என்ற பொத்தானை அழுத்தி உங்களின் புதிய வலைப்பதிவை தொடங்கலாம் கீழ் கண்டா படத்தில் பாருங்கள்

இப்போது தீம் THEME என்கிற உங்களின் வலைப்பதிவுக்கான முகப்பு பக்கத்தை தேர்வு செய்யவேண்டும் மேலே உள்ள படத்தில் SIMPLE என்பதை நான் தேர்வு செய்திருப்பதை போல 

பிறகு CREAT BLOG என்கிற பொத்தானை அழுத்துங்கள் 

பிறகு கீழ்க்கண்ட பகுதியை படத்தை காணலாம் 

GOOGLE DOMAIN என்பது நமது பெயரில் நாம் வாங்கும் இணையதள முகவரியாகும் அதற்க்கு பணம் தந்து வாங்கவேண்டும்.

ஆகவே இலவசமாக வலைப்பதிவு வைத்திருக்க "NO-THANKS" வேண்டாம் என்ற பொத்தானை அழுத்தி அடுத்த பகுதிக்கு செல்லுங்கள்.


மேற்கண்ட படத்தில் உள்ளதைப்போன்று புது வலைப்பதிவு பக்கம் உருவாகிவிட்ட பகுதிக்கு நாம் வருவோம் 

இப்போது நீங்கள் படத்தில் உள்ள NEW POST என்கிற பொத்தானை அழுத்தி
கீழ் கண்டா படத்தை போன்ற ஒரு பகுதிக்கு சென்று 


உங்களுக்கு விருப்பமான பதிவுகளை எழுதி SAVE செய்து வைத்து அனைத்து பதிவு வேலைகளும் முடிந்ததும் PUBLISH என்கிற பொத்தானை அழுத்தினாள் அனைவருக்கும் உங்களது இனைய வலைதளப்பாக்கம் பார்வைக்கு வந்துவிடும்.

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களது வலைப்பதிவு முகவரியை பயன்படுத்தி உங்களது பதிவை நீங்களும் பார்க்கலாம் அல்லது வேறு ஊரில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் உங்களது நண்பருக்கும் உங்களது இனைய முகவரியை அனுப்பி நீங்கள் எழுதிய வலைப்பதிவுகளை பார்க்க செய்யலாம் 

மேற்கண்ட வழிகள் அனைத்தும் ஒரு முறை மட்டுமே செய்யவேண்டும் . 

தொடர்ந்து நீங்கள் செய்யும் பதிவுகளுக்கு ஒவ்வொரு முறையும் நீங்கள் படத்தில் உள்ள NEW POST என்கிற பொத்தானை அழுத்தி தொடர்ந்து பதிவுகளை எழுதலாம்

அடுத்த பகுதியில் எப்படி வலைப்பதிவை செய்வது, நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு புகைப்படங்களை எப்படி நிறுவுவது என்பன போன்ற விவரங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம் 

மேலும் உங்களது சந்தேகங்களை GOOGLE PLUS+ என்கிற கீழை கண்டா பக்கத்தில் குறிப்பிடுங்கள்
இங்கே கிளிக் செய்து https://plus.google.com/u/0/communities/102493832630871987544
கீழை இருக்கும் படத்தில் இருக்கும் GOOGLE PLUS+ பகுதிக்கு செல்லலாம் 
மீண்டும் அடுத்த பயிற்சி பாட பதிவில் சிந்திப்போம் 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

Thursday, April 25, 2019

திடீரென்ற விலை அதிகரிப்புகளை எவ்வாறு சமாளித்து தீர்வை எட்ட வேண்டும்: -(How To Negotiate, The Sudden Price Increases)

பொருட்கள் மற்றும் தளவாட மேலாண்மையில் மேம்பட்ட பயிற்சி :-(Advanced Course in Materials & Logistics Management.):-

தளவாட மேலாண்மை பற்றிய மேலும் பல விவரங்களுக்கு Please visit more Logistics Management postings at my site "www.iuba-india.com"

திடீரென்ற விலை அதிகரிப்புகளை எவ்வாறு சமாளித்து தீர்வை எட்ட வேண்டும்: -(How To Negotiate, The Sudden Price Increases)

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் வந்தாலே பொருட்கள் தயாரிப்பாளர்களோ அல்லது விநியோகஸ்தர்களோ (சப்ளையர்) அல்லது சேவை வழங்குபவர்களோ, அனைவரும் அவர்களது விலையை அதிகரிப்பு செய்துவிடுகிறார்கள். எனவே பொருட்களையும் சேவையையும் பயன்படுத்துபவர்கள் அல்லது கொள்முதல் செய்பவர்கள் இந்த தீடிரென்ற விலைஉயர்வை சமாளிக்கமுடியாமலும் உரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தி விலைஉயர்வை தவிர்ப்பது எப்படி என்பது தெரியாமல் அவர்களுக்குத் தேவையான பொருளோ சேவையோ கிடைக்காமல் தோல்வியை சந்திக்கிறார்கள். 

விலை உயர்வை சமாளிக்கவும் அதோடு விலைஉயர்வை தடுக்கவும்  நீங்கள் எப்படி பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்? மேலும் விலை உயர்வு பற்றி பேச்சுவார்த்தையை நீங்கள் எப்போது எப்படி தொடங்க வேண்டும்? 

அந்த இரண்டாவது கேள்விக்கான பதில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். நீங்கள் முதலில் தற்போதைய விலையை பெற்றபோது விலை அதிகரிப்பை தடுக்க தேவையான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகிவிட்டீர்கள் என்றால், எப்படி பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும்? என்று இப்போது பார்க்கலாம். விலை உயர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்கு முன்பாக நாம் முதலில் பொருள் அல்லது சேவை வழங்குபவரிடம் விலைஉயர்விற்கான அடிப்படை காரணமான "கட்டண செலவுப் படிகள்/பட்டியல் " (Cost breakdown report) விவரங்களைப்பெறவேண்டும். "செலவுப் படிகள்-விவரம்" என்றால் என்ன? 

மேற்கண்டவற்றை எப்படி என நான் விரிவாக எடுத்துரைப்பதற்கு முன்பாக, பொருள் அல்லது சேவை வழங்குபவரின் கூற்றான "அலுமினியம் விலைகள் கடந்த ஆண்டு 28% சதவிகிதம் உயர்ந்துவிட்டன, எனவே நாங்கள் உங்களுக்கு வழங்கும் பொருள் அல்லது சேவையை 28% சதவீதம் உயர்த்துவது என முடிவாகியுள்ளது" என்பதை ஏற்றுக்கொள்ள தயாராகவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுவதை நாம் நமது நினைவில் வைக்கவேண்டும். 

திடீரென்ற விலைஉயர்வை ஏற்க நீங்கள் (நிறுவனம்) தயாராக இல்லை என்றால், பொருள் அல்லது சேவை கிடைக்காமல் அந்த கட்டத்தில் கடுமையான விளைவுகளை உங்கள் நிறுவனத்திற்கு ஏற்படுத்தும் எனவே, உயர் வருடாந்திர-செலவின தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கான மேற்கோள்களை முதலில் பெறுகையில், சப்ளையர்கள்(விநியோகத்தினர்களின்) செலவீன குறைப்புக்களை கேட்க முயற்சி மேற்கொள்ளலாம்.

முதன்முதலில், சப்ளையர் விலையில் இருந்து விலையை வாங்கும்போது, அந்த கட்டண செலவு படிகளின் விவரம் கிடைக்கும். சப்ளையர்கள் இத்தகைய தகவலை நேரடியாக உங்களோடு பகிர்ந்து கொள்ள தயங்கலாம், ஆனால் உங்கள் வணிகத்திற்காக போட்டியிடும் போது பொதுவாக அதிக விருப்பம் கொண்டு இதற்க்கு சம்மதிக்கலாம், ஆகவே அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

ஒவ்வொரு முக்கிய பொருள், பிற பொருட்கள், உழைப்பு, மேல்நிலை மற்றும் இலாபம் ஆகியவற்றைக் கொண்ட மொத்த செலவுகளின் சதவீதத்தை ஒரு கட்டண செலவு படிகள்(Cost breakdown report) காண்பிக்கும். உதாரணமாக, செலவு படிகள் அல்லது பட்டியல்கள் இதுபோல் இருக்கலாம்:

(வூட்) மரம் = 20%,
அலுமினியம் = 7%,
மற்ற பொருட்கள் = 3%,
மேல்நிலை செலவு = 13%,
தொழிலாளர் செலவு = 45%,
தயாரிப்பாளரின் லாபம் = 12%

மேற்கண்ட பட்டியல் ஒரு சப்ளையர் விலை உயர்வை முன்மொழிகிறது மற்றும் மேலே உள்ள பட்டியல் வகை நியாயத்தை பயன்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால், "அலுமினியம் 28% அதிகரித்துள்ளது, ஆனால் அலுமினியம் மட்டுமே உங்கள் விலையில் வெறும் 7% சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. ஆகவே உங்கள் விலை 2% வரை மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கவேண்டும். "

அதோடு சப்ளையர் நிறுவன தயாரிப்பில், உங்களது நிறுவனம் வெறும் 10% பொருட்களை/சேவையை மட்டுமே பெறுகிறது எனக்கொண்டாள் மீதமிருக்கும் 90% சதவீத தயாரிப்பு பொருட்கள்/சேவைகள் வெவ்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதால் அதற்கும் சேர்த்து விலை அதிகரிப்பிற்காக உங்கள் நிறுவனம் பொறுப்பேற்கவேண்டியதில்லை.    

அப்படியென்றால் நீங்கள் அதோடு அங்கு பேச்சுவார்த்தைகளை நிறுத்த வேண்டுமா?  இல்லை! மேலும் பல விவரங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். 

மேலும் சிறிய உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு உழைப்புச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் வாதிடலாம். பொருட்களின் விலையை உயர்த்துவதை விடவும், உங்கள் விலை குறையாமல் கொள்முதல் செய்யப்போகும் அளவுக்கு உற்பத்தியை அதிகரிப்பதாக சப்ளயருக்கு நம்பிக்கையூட்டவேண்டும்!.


மேற்கண்ட உதாரணத்திலிருந்து நீங்க தெரிந்துகொள்ளவேண்டியது, அடுத்தமுறை விலையை உயர்த்துகிறோம் என்று உங்களுக்கு பொருட்கள் அல்லது சேவை வழங்கும் நிறுவனம் கூறினால் மேற்கண்டவாறு அந்த சப்ளையர் நிறுவனத்திடமிருந்து கட்டண செலவுப் படிகளின் விவரங்களை கேட்டு அதர்கேற்றபடி அவர்களிடம் பேசி சமாளித்து சிறப்பான ஒரு தீர்வை எட்ட வேண்டும்.

மீண்டும் அடுத்தப்பதிவில் சந்திப்போமா?
நன்றிகளுடன்,
கோகி -ரேடியோ மார்கோனி.




பொருட்கள் மற்றும் தளவாட மேலாண்மையில் மேம்பட்ட பயிற்சி :-Advanced Course in Materials & Logistics Management.:-

How To Negotiate, The Sudden Price Increases:- திடீரென்ற விலை அதிகரிப்புகளை எவ்வாறு சமாளித்து தீர்வை எட்ட வேண்டும்: -

January is a common time for supplier price increases. So, today, purchasers are trying, perhaps unsuccessfully, to negotiate those price increases away.

How do you negotiate price increases? Better yet, when should you begin preparing to negotiate price increases?

The answer to that second question may surprise you. You should have begun preparing to negotiate a price increase when you originally obtained the current price.

Before I elaborate, consider a typical supplier justification like “We must raise your price by 28% because aluminum costs went up 28% last year.”

That point is tough to argue if you’re not prepared. So, when first obtaining quotes for high-annual-spend products or services, ask for suppliers’ cost breakdowns.

A cost breakdown will indicate the percentage of the total cost that is comprised by each major material, other materials, labor, overhead, and profit. For example, a cost breakdown may look like this:

Wood = 20%, 
Aluminum = 7%, 
Other materials = 3%, 
Overhead = 13%, 
Labor = 45%,
Profit = 12%

If a supplier proposes a price increase and tries to use the above type of justification, you can say something like: “Aluminum increased by 28%, but aluminum only comprises 7% of your price. Considering nothing else, your price should only go up by 2%.”

Should you stop negotiating there? Heck no!

You can argue that productivity gains should have reduced labor costs enough to offset the small materials price increase. Maybe you can even convince the supplier that productivity gains more than offset the materials price hike and that your price should go down!

The key is to get that cost breakdown when you first obtain pricing from a supplier. Suppliers can be hesitant to share such information at times, but are usually more willing when they are competing for your business.

We'll meet again on my next posting.
Until than, Thanks & Regards,
Gopal Krishnan-Radio Marconi.


எதிலும் எப்போதும் "ஒரு படி முன்னே....!!!!"

எதிலும் எப்போதும் "ஒரு படி முன்னே....!!!!"  
வனங்களில் விறகு சேகரித்து வயிற்றைக் கழுவி வந்த அந்த மனிதனின் எதிரே ஒரு முனிவர் வந்தார். 

“இன்னும் முன்னால் போ” என்றார்." 

போன இடத்தில் நிறைய சந்தனக் கட்டைகள் கிடைத்தன. அவற்றை விற்றதில் காசு நிறைய கிடைத்தது. 

மீண்டும் அந்த முனிவர் எதிரே வந்தார். 

“இன்னும் முன்னால் போ” என்றார். 

இப்போது நிறைய சுரங்கங்கள் தட்டுப்பட்டன. அவற்றை அள்ளிச் சென்று பெரும் செல்வந்தனாக மாறினான். 

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி! உங்களை முன்னேற்றப் போகிற முத்திரை வாசகம்….. 

“இன்னும் முன்னால் போ” என்பதுதான்!!  (என்றும் நட்புடன்.....கோகி)

Wednesday, April 17, 2019

மாற்றம் என்பது பிறருக்கு அல்ல உங்களுக்குத்தான் தேவை.

மாற்றம் என்பது பிறருக்கு அல்ல உங்களுக்குத்தான் தேவை. நன்கு சிந்தியுங்கள் மாற்றம் வேண்டும் என்று கூறி அவர்களுக்குத்தேவையான மாற்றத்தை உங்களை வைத்து நிறைவேற்றிக் கொள்கிறார்கள். முதலில் நீங்கள் உங்களின் அலுவலத்தில் உங்களின் வேலையை செய்கிறீர்களா அல்லது பிறரது வேலையை செய்கிறீர்களா என்று நீங்களே உங்களைப்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்.   உலகின் 96 % மக்கள் அவர்களது பணியை செய்யாமல், மற்றவர்களின் பணியை செய்து உழைக்கிறார்கள். எப்போது ஒரு மனிதன் தன்னைப்பற்றி உணர்ந்து தனது முன்னேற்றத்திற்கு உழைக்கிறானோ அப்போதுதான் அவன் உயர்வான ஒரு நிலையைப் பெறுவான். 

நிர்வாகிகள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட செயலை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்பட்டால் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். இதைத்தான் நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்..... அப்படி முன்னோர்கள் கூறிய அந்தக்கதைதான் என்ன?


ஒரு ஊரில் துணிகளை துவைக்கும் சலவைத் தொழிலாளி ஒருவர் அவரது வீட்டில் அவருக்கு உதவியாக இருக்க ஒரு கழுதையையும், அவரின் வீட்டு காவலுக்கு என ஒரு நாயையும் மிக அன்போடு பராமரித்து வளர்த்துவந்தார்.

ஒருநாள் இரவு ஒரு திருடன் அந்த சலவைத் தொழிலாளியின் வீட்டில் இருக்கும் பொருளை திருடுவதற்காக சிறிது தொலைவில் மறைந்திருந்து, இரவு அனைவரும் தூங்கட்டும் பிறகு திருடலாம் என காத்திருந்தான்.

இதைப்பார்த்துவிட்ட சலவைத் தொழிலாளியின் வளர்ப்புக் கழுதை, தமது எஜமானர் வீட்டுக்கு திருடன் திருட வந்திருப்பது தெரிந்து மனம் பதறியது, கழுதையின் அருகே அமைதியாக படுத்திருக்கும் அந்த வீட்டு நாயிடம், கழுதை தனது பதற்றத்தை கூறி அவர்களது எஜமானரை எழுப்பி நடக்கவிருக்கும் திருட்டை தடுக்க உதவுமாறு கூறியது. அதற்க்கு நாயும் அந்த திருடன், திருட ஒளிந்திருப்பதை பார்த்துவிட்டதாகவும், திருடனை பிடித்து திருட்டை தடுக்கவேண்டியது இந்த வீட்டு நாயான தன்னுடைய வேலை எனவே நான் பார்த்துக்கொள்கிறேன், கழுதையே நீ சற்று அமைதியாக உன்னுடைய வேலையை கவனி என்றது.

பதற்றமாக இருந்த கழுதை, எப்படியாவது திருடன் வந்திருப்பதை தமது எஜமானருக்கு தெரியப்படுத்தவேண்டும் என தனது சக்தியை எல்லாம் திரட்டி உரக்க கத்தியது .....

கழுதையின் கத்தலைக் கேட்ட சலவைத் தொழிலாளி தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டான், இந்தக் கழுதை ஏன் இப்படி நாடு இரவில் எனது தூக்கத்தைக் கெடுத்து கத்துகிறது என்று வீட்டின் கூரையில் சொருகி இருந்த உருட்டுக் கட்டையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியில் வந்தான், அங்கு கத்திக்கொண்டிருந்த கழுதையின் முதுகில், தனது கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் ஓங்கி ஒரு அடி அடித்து, கழுதையே உனக்கு என்ன வந்தது வாயை மூடி அமைதியாக படுத்துக்கிட, ஏன் எனது தூக்கத்தைக் கெடுக்கிறாய் என்று கூறி மேலும் ஒரு உருட்டுக்கட்டை அடியை கழுதைக்கு தந்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான். 

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாய், கழுதையைப் பார்த்துக் கூறியது. நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் என "அவரவர் வேலையை அவரவர் செய்யவேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் உதய் விழும்" என்றது.....        

இது அலுவலக மேலாண்மைக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் முன்னேற, சிறந்த இடத்தைப் பிடிக்க ஒவ்வொருவருக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.  

மேலும் ஒரு உதாரணத்திற்கு... வகுப்பில் உள்ள மாணவர்களிடையே நன்றாக படிப்பவன் சுமாராக படிப்பவன் என்ற பேதம் இருந்தாலும், யார் தன் நிலையிலிருந்து மிகுந்த முன்னேற்றம் அடைகிறார்களோ அவர்களே ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவருவார்கள். அந்த மாணவனே சிறந்த மாணவனாக ஆசிரியரால் முன்நிருத்தப்படுகிறான். ஆகவே நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்களுக்குண்டான வேலையைமட்டும் சிறப்பாக செய்து பேரும் புகழும், அதற்குரிய ஊதியமும் பெற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். சிலருக்கு தன்னுடைய வேலை எது என்றுகூட பிரித்து தெரிந்துகொள்ளக்கூடிய திறமையில்லாமல், மற்றவரது வேலைதான் தன்னுடைய வேலை என்று வாழ்க்கையை வாழத்தெரியாமல் வீனடித்துக்கொண்டிருக்கிரார்கள். இந்தப் பதிவை மேலும் தொடர்ந்து படியுங்கள் பல விவரங்கள் உங்களுக்குப் புரியும்.

"பாடல்:- இந்த மாநிலத்தைப் பாராய் மகனே! உந்தன் வாழ்க்கை தனை உணர்வாய் மகனே! இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா! முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா!!!! ...."

முதலில் அலுவலகத்தில் உங்களது பனி எது என்று தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் சேர்த்து செய்தால் தான் நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு  முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் உங்களின் சொந்த முயற்சிக்கான வேலைகளையும் செய்யவேண்டும். 

உதாரணமாக உங்களின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் சொந்த முயற்சிக்கான, உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம்  என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய நேரமாக, உங்களின் உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு  6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு  6 மணி  = 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது உங்களுக்கு பணம்பழம போன்ற நெல்லிக்கனி"  (புரிகிறதா? இல்லையென்றால் மேற்கூறிய உதாரணத்தை திரும்ப திரும்ப படித்துப்பாருங்கள் புரியும்).

பாடல்:- "காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது" என்பதை நேரம் + நிர்வாகம் = வெற்றி என்கிற நூலாக்கி, நேரத்தை நமது நிர்வாகத்தில் வைப்பதன் முக்கியத்துவத்தை மிகக் கச்சிதமாக எழுதியிருக்கிறார் கவிஞ்சர் கண்ணதாசன் அவர்கள்....

மேலும் தற்போது உங்களின் மாத ஊதியம் 10000/- என்றால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளின் அது இரண்டு மடங்காக 20000/- என ஊதியம் அதிகமாக கிடைக்குமாறு, அதற்குத் தேவையான முயற்சிகளை செய்வதுதான், உங்களின் உயர்வுக்கான சொந்த முயற்சிக் குறிக்கோளாக இருக்குமாறு, நீங்கள் தினமும் சேமிக்கும் உங்களின் உபரி நேரத்தில் அதற்க்கான முயற்சிகளை செய்யும் நேரமாக அமைத்துக்கொள்ளுங்கள்.

"பாடல்:-உள்ளத்திலே உரம் வேண்டுமடா, உண்மையிலே திறம் காணுமடா,  ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா..........ஏட்டுச சுரைக் காயெல்லாம், மூட்டை கட்டியாகணும், நாட்டினிலே வீரம் பொங்கும் நாள் வரணும்....."  

ஆகவே அவரவர் வேலையை அவரவர் செய்வதே சாலச் சிறந்தது அதாவது "நாயின் வேலையை நாயும் கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும்". 

நான் பலநேரம் இதுபற்றி சிந்தித்ததுண்டு, இன்னமும் கூட பலர் அவர்களின் அலுவலகத்தில், அவர்களது வேலையை செய்யாமல் பிறரது வேலையை செய்து மாத சம்பாத்தியம் பெறுகிறார்கள்.  எப்போது ஒருவர் தன்னுடைய வேலை இது என்று உணர்ந்து, தனது வேலையைமட்டும் சிறப்பாக செய்து பேரும் புகழும் பெற்று உயர்வு பெறுகிறார்களோ, அவரே அவர்களது வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களது ஆரம்ப இடத்திலேயே சரியாக வாழக்கையை அமைத்துக்கொள்ளாமல் திணறி தனது முடிவுக்கு தானாகவே காரனமாகிவிடுகிரார்கள். இதை வைத்துத்தான் நீங்கள் பணிபுரியும் உங்களின் நிறுவனம் உங்களின் திறனை மதிப்பிடுகிறது.

"பாடல்:-புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...."

இப்போது நாம்,  நமது உயர்விற்கான தலைவிதியை எப்படி மாற்றி அமைத்துக்கொள்வது என்பதைப் பார்ப்போம்..... இதற்க்கு நாம் நமது அனைவரது வாழ்விலும் உள்ள ஒரு உதாரணத்தை இங்கு எடுத்துக்கொள்வோம். வழக்கமாக நாம் அலுவலகம் செல்ல பேரூந்து நிறுத்தத்தில் பலமணி நேரம் காத்துக்கிடந்தும் நமக்குத் தேவையான அந்த பேரூந்து உடனே வருவதில்லை. பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இருந்தாலும் அரை மணிநேரமாகியும் எந்த ஒரு பேரூந்தும் வாராதது நமது தலைவிதி என்று நினைப்போம். மறுநாள் நமக்கு பேருந்தில் செல்லவேண்டிய அவசியமிருக்காது, நாம் வேறு வேலையாக நேற்று நின்றிருந்த அதே பேரூந்து நிலையத்தைக் கடக்கின்றபோது, நேற்று எந்த பெரூந்திர்க்காக வெகுநேரம் காத்திருந்தோமோ அதே பேரூந்து ஒன்றன்பின் ஒன்றாக காலியான இருக்கைகளுடன் இரண்டு மூன்று பேரூந்துகள் செல்வதைப்பார்க்கலாம்.

"பாடல்:- சொல்லாதே யாரும் கேட்டால், எல்லோரும் தாங்கமாட்டார்... ....விதி என்று ஏதுமில்லை, வேதங்கள் வாழ்க்கையில்லை ...." 

ஆகவே ஒன்று நிச்சயமாக தெரிகிறது, எது நமக்கு வேண்டுமோ அது நமக்கு கிடைக்காது, எது நமக்கு வேண்டாமோ அது நிறைய கிடைக்கும்" இதுதான் நமது தலைவிதி என்று தெரிந்துவிட்டதால் இனி நாம் நமது வாழ்க்கையை எது கிடைக்கிறதோ அதை நோக்கி அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். அது எப்படி என்று மேலும் தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.  

பாடல்: "மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒரு குரங்கு, அதை தாவ விட்டால், தப்பி ஓட விட்டால்... நம்மை பாபத்தில் ஏற்றிவிடும்..."

பொதுவாக மனிதனின் மனம், "இது" இருந்தால் நான் இன்னும் சிறப்பாக இருப்பேன் என்கிற மனநிலையில் "இது (அல்லது) அது" என்பவற்றிற்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறது. 

உதாரணமாக இன்னும் அதிக சம்பளம் கிடைத்தால் நான் இன்னமும் அதிக நேரம் கடுமையாக உழைக்கத் தயார் என்கிற கூற்று அனைவரின் மனதிலும், அதோடு சொல்லிலும், செயலிலும் வெளிப்படுவதைப் பார்க்கிறோம், ஆகவே மனிதனின் மனம் "பணம்" என்கிற ஒன்றின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் "கோழை" என்று சொன்னால் எத்தனை உள்ளங்கள் இது சரியான கூற்று என்று ஒப்புக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறது??????. 

"பாடல்:- மயக்கமா? கலக்கமா?...மனதிலே குழப்பமா?... வாழ்க்கையில் நடுக்கமா?......." 

வேறு ஒரு உதாரணத்தையும் சொல்கிறேன்.... ஒருவர் மற்றவரை ஒப்பிட்டு தனது நிலையைப் பற்றி நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பார். நான் செய்யும், அதே பணியை செய்யும் அவருக்கு என்னைவிட அதிக சம்பளம் என்பார்... "எனக்கு ஒருநாளைக்கு ரூ300 என்றால் அதே வேலையை செய்யும் அவருக்கு ரூ400 ஏன்?" என்பார்... 

அதற்க்கு நான் அவரிடம் ..... "நீங்கள் ரூ600 க்கு தகுதியுடையவர் பின்பு ஏன் ரூ 400ஐப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள்???? என்றேன்".... 

அப்படிஎன்றால் எனக்கு ரூ 600 கிடைக்கவேண்டுமல்லவா ஏன் கிடைக்கவில்லை? என்கிற அவரின் கேள்விக்கு நான் தந்த பதில்.... "அது உங்களின் கையில் அல்லவா இருக்கிறது... முதலில் ரூ 600க்கு உண்டான வேலையை, திறமையை செயலில் காட்டுங்கள். பிறகு என்னை வந்து பாருங்கள்.... என்றேன். 

"பாடல்- உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... உனக்கு நீதான் நீதிபதி... மனிதன் எதையோ பேசட்டுமே.... மனச பார்த்துக்கோ நல்லபடி உன் மனசை பார்த்துக்கோ நல்லபடி....." 

ஆகவே ஒரு ரகசியத்தை நான் இப்போது உங்களுக்கு சொல்கிறேன்.... நீண்ட ஒரு வரிசையில் நிர்ப்பவர்களில், முதலில் யார் நிற்கிறார்களோ அவர்களை மட்டுமே நாம் பார்க்கமுடியும். அவர்களின் பின்னால் நிர்ப்பவர்களை நம்மால் பார்க்கமுடியாது.  உலகத்தின் பார்வை யார் முதலில் இருக்கிறார்களோ அவர்களின் மீது மட்டுமே இருக்கும், அதாவது, நல்ல சம்பளம், நல்ல வாய்ப்பு என ஏதாவது ஒரு காரணத்தின் பின்னால் நீங்கள் நின்றுகொண்டிருந்தாள்... பின்னல் நின்றுகொண்டிருக்கும் உங்களை யாருக்கும் தெரியாமலே போய்விடும். அடுத்த 10 வருடங்கள் ஆனாலும் நீங்கள் முன்னேறமுடியாது. ஆகவே ஏதாவது ஒரு காரணத்தின் பின்னால் நிற்கும் உங்களின் முடிவை விட்டுவிடுங்கள். குறைவான சம்பளம் அல்லது சம்பளமே இல்லையென்றாலும் சிறப்பாக எந்த வேலையையும்  செய்து முடிப்பேன் என்கிற முடிவோடு செயல்பட்டு, முதலிடத்தில் நில்லுங்கள்..... பிறகு பாருங்கள்... உங்களின் சிறப்பான செயலை பாராட்டி பதவியும் பணமும் உங்கள் பின்னால் வரும்..... உங்களுக்கு எது தேவையோ அனைத்தும் உங்களின் பின்னால் வரும்... உங்களுக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் உங்களின் பின்னல் வரும் அவைகளை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையென்றால் உங்களின் அதிகாரிக்குப் பின்னால் செல்லும் உங்களைத்தான், அவரது முன்னேற்றத்திற்கு அவர் பயன்படுத்திக்கொள்வார். 

"பாடல்:- பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே ...கருடன் சொன்னது.... அதில், அர்த்தம் உள்ளது..."

முதலில் உங்களின் முன்னேற்றத்திற்கு என்னவெல்லாம் தேவை என்பதை தேர்ந்தெடுத்து அதற்க்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், படிப்படியாக நீங்கள் உயர்ந்தநிலை அடைந்தபிறகு, அந்த உயர்நிலையை சரியானபடி தக்கவைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.....  பலர் மகாபாரத அபிமன்யுவைப் போல வேகமாக உயர்வான நிலையை எட்டிப்பிடித்து பிறகு அந்த உயர் பதவியை த்க்கவைத்துக்கொள்ளமுடியாமலும், அந்தப்பதவிக்கு கீழ் நிலைக்கு வரமுடியாமலும், தட்டுத் தடுமாரிவிடுகிரார்கள்... ஆகவே நீங்கள் பெற்ற உங்களின் உயர்நிலையை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்பதைப்பற்றி  பார்ப்போம் ....தொடரும் 

"பாடல்:- துணிந்து நில், தொடர்ந்து செல்... தோல்வி கிடையாது தம்பி... உள்ளதை சொல், நல்லதை செய்... தெய்வம் இருப்பதை நம்பி...."

.... அன்புடன் கோகி -ரேடியோ மார்கோனி.  புது தில்லி 

கோடீஸ்வரர் ஆகும் திட்டத்தில் ஒரேமாதத்தில் ஒருகோடி பெற மிகச்சுலபமான வழிமுறைகள் இதோ இங்கே:-

கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி 

-o-o-o-o-O-o-o-o-o-

கோடீஸ்வரர் ஆகும் திட்டத்தில் ஒரேமாதத்தில் ஒருகோடி பெற மிகச்சுலபமான வழிமுறைகள் இதோ இங்கே:-


வரும் மே மாதம் முதல் தேதியன்று என்னிடம் ஒரு சிறுசேமிப்புக் கணக்கு துவங்குங்கள். 

01.05.2019 அன்று ஒரே ஒரு பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.

02.05.2019 அன்று முதல் நாள் போல இரு மடங்கு அதாவது இரண்டே இரண்டு பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.

03.05.2019 அன்று முதல் நாள் கொடுத்த இரண்டு பைசா போல இரண்டு மடங்கு அதாவது 4 பைசா மட்டும் சேமியுங்கள் போதும்.

இதுபோல 1.05.2019 முதல் 31.05.2019 வரை, முதல் நாள் சேமித்தது போல இரண்டு மடங்கு அடுத்த நாள் சேமிக்க வேண்டும், நீங்கள். 

வாழ்க்கையில் எவ்வளவோ சம்பாதிக்கும் நீங்கள் இது போல செய்வது கஷ்டமா என்ன? 

அதுவும் மிகவும் நம்பிக்கையான நாணயமான என்னிடம், அதுவும் நீங்கள் சேமிக்கத்தானே போகிறீர்கள்! 

இதில் வெட்டிச்செலவோ வீண்செலவோ ஏதும் இல்லையே!! 

ஒரே ஒரு பைசாவில் ஆரம்பிக்கும் மிகவும் எளிமையான சுலபமான சேமிப்பு அல்லவா!!!

ஒரு மாதம் அதாவது மே 31 நாட்கள் முடிந்ததும், அதாவது 01.06.2019 அன்று,  நான் சுளையாக உங்களுக்குத் தரப்போவதோ 

"ஒரு கோடி ரூபாய்"


இந்த கோடீஸ்வரர் ஆகும் திட்டத்தில், முதலில் என்னிடம் பெயர் பதிவு செய்துகொள்ளும் 100 நபர்களுக்கு ஒரு பவுன் அதாவது 8 கிராம் தங்க நாணயம் இலவசம்; ஆடித்தள்ளுபடி போல. 25-05-2019 அன்று உங்களுக்கு வழங்கப்படும். 

மொத்த வாடிக்கையாளர்களின் பெயர்களை குலுக்கல் நடத்தி அதில் விழும் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 25 லட்ச ரூபாய் விலையுள்ள மிக உயர்ந்த கார் அல்லது வீடு  பரிசும் உண்டு. கார்/வீடு  பெறும் அதிர்ஷ்டசாலி நீங்களே தான். முந்துங்கள்! 
01-05-2019 0.01
02-05-2019 0.02
03-05-2019 0.04
04-05-2019 0.08
05-05-2019 0.16
06-05-2019 0.32
07-05-2019 0.64
08-05-2019 1.28
09-05-2019 2.56
10-05-2019 5.12
11-05-2019 10.24
12-05-2019 20.48
13-05-2019 40.96
14-05-2019 81.92
15-05-2019 163.84
16-05-2019 327.68
17-05-2019 655.36
18-05-2019 1310.72
19-05-2019 2621.44
20-05-2019 5242.88
21-05-2019 10485.76
22-05-2019 20971.52
23-05-2019 41943.04
24-05-2019 83886.08
25-05-2019 167772.16
26-05-2019 335544.32
27-05-2019 671088.64
28-05-2019 1342177.28
29-05-2019 2684354.56
30-05-2019 5368709.12
31-05-2019 10737418.24
தேதி ஒன்னுல இருந்து 20 வரைக்கும் கொண்டாட்டம்.... கொண்டாட்டம்... 21 இருந்து 31வரை திண்டாட்டம்... திண்டாட்டம்...
என்ன நண்பர்களே / நேயர்களே நீங்கள் தயாரா????????????????? உங்கள் கணக்கை துவங்கவேண்டிய இடம்   https://trainthetrinertraining.blogspot.com




Sunday, April 14, 2019

ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது... ஓட்டுப்போட்ட உங்களுக்குத் புரிந்ததா?

ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது...  

ஒரு நாள் குருகுலத்தில் "ஜென்" குருக்களில் முதன்மையானவர் என்று கூறப்படுகிறது "கன்பூசியஸ்" என்ற குருவானவர், தன்னுடைய மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் எழுந்து சில அறிவுரைகளைக் கேட்டான்.

‘"ஒருவரது ஆட்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், எது எது தேவை?’.

‘ஆட்சி சிறப்பாக அமைய மூன்று விஷயங்கள் முக்கியம். 
முதல் தேவை.. போதிய உணவு இருப்பு. 
இரண்டாவது மக்களின் பாதுகாப்புக்கு பலமான ராணுவம். மூன்றாவதுமக்களின் நம்பிக்கையை அரசு பெற்றிருக்க வேண்டும். 

இந்த மூன்றிலும் தன்னிறைவு பெற்றிருப்பதே சிறப்பான அரசு  நிர்வாகம்’ என்றார் குரு.

மாணாக்களிடமிருந்து மீண்டும் கேள்வி.. ‘இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை விட வேண்டும் என்றால், முதலில் விட வேண்டியது எது?’

குரு :- ‘ராணுவம்’

மாணவர் :- ‘இரண்டாவதாக ஒன்றை விட வேண்டும் என்றால்..?’

குரு :- ‘உணவு இருப்பு’

மாணவர்கள் அனைவருக்குமே ஆச்சரியம்.!!! சாப்பிடாமல் எப்படி????.... அவர்களின் ஆச்சரியத்தைக் கண்ட குரு,  அதற்கான விளக்கத்தை அளிக்க முன்வந்தார்.

‘மாணவர்களே! உணவு இல்லையென்றால் பஞ்சம் ஏற்படும். மக்கள் மடிய நேரிடும். மனித சமுதாயத்திற்கு இதுபோன்ற நிலை பலமுறை வந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் மனித சமுதாயம் அதில் இருந்து மீண்டிருக்கிறது. ஆனால் ஒரு அரசின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால், அந்த நாட்டின் நிலை அதோகதியாகிவிடும்’ என்றார் கன்பூசியஸ்- குரு.

மாணவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். 

குருவின் அறிவுரை மாணவர்களின் மண்டைக்குள் புகுந்துவிட்டது..., 
ஓட்டுப்போடாத பள்ளி மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது...   ஓட்டுப்போட்ட  உங்களுக்குத் புரிந்ததா? 

"வால் மட்டும்... இன்னும் உள்ளே நுழையவில்லை"

..... கோகி-ரேடியோ-மார்கோனி..... 

சொந்தமாக "சிக்கு புக்கு -இரயில் வண்டி* வைத்திருந்த தமிழரைப் பற்றி.....

சொந்தமாக "சிக்கு புக்கு -இரயில் வண்டி* வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா? சென்னையில் ஒரு ரயில் நிலையம், சேத்துப்பட்டு என்ற பெயரில் உள்ளதே; அதை தெரியுமா?

தனி மனிதர் ஒருவர் சொந்தமாக கார், பேருந்து, விமானம் ஏன் கப்பல் கூட வைத்திருப்பார்கள், ஆனால் சொந்தமாக ரயில் வைத்திருக்கிறார்களா? ஆம், தமிழர் ஒருவர் வைத்திருந்திருக்கிறார்.
அவர் தான் சென்னையைச் சேர்ந்த தாட்டிகொண்ட "நம்பெருமாள் செட்டியார்" (Thaticonda Namberumal Chetty 1856--1925). தற்போது சென்னையில் உள்ள சேத்துப்பட்டு பகுதியின் வரலாற்றுக்கு சொந்தக்காரரான இந்த நம்பெருமாள் செட்டியார், சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற பல சிவப்பு நிற கட்டிடங்களை உருவாக்கியவர். பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை.
18 ஆம் நூற்றாண்டில் பிரபலமான பில்டிங் காண்ட்ராக்டராக இருந்த இவர் வாழ்ந்த வீடு ‘வெள்ளை மாளிகை’ என்ற பெயருடன் சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர்.மேத்தா மருத்துவமனையின் பின்புறம் உள்ளது. 3 மாடிகள், 30 அறைகள் கொண்ட இந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இதில், சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப்பட்ட அரிய கலைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
Chennai எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஹாரிங்டன் சாலை வரை உள்ள நிலப்பரப்பு நம்பெருமாளுக்கு சொந்தமாக இருந்தது. அதன் காரணமாகவே அப்பகுதி, ‘செட்டியார் பேட்டை’ என அழைக்கப்பட்டது. நாளடைவில், ’செட்டிபேட்டை’ என மருவி, தற்போது ‘செட்பெட்’ என மாறிவிட்டது. ஆங்கிலேயர் பலருக்கு வீடு கட்டித்தந்த நம்பெருமாளின் வீட்டில் தான், கணித மேதை ராமானுஜம் தம் இறுதி நாட்களை கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் பாதிப்பு அதிகமாகிவிட்டதால், அவரது உறவினர்கள் பயந்து போய், திருவல்லிக்கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை. அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார். ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் மறைந்தார். அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர்.
ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார். ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்றவர் நம்பெருமாள். முன்னாள் இம்பீரியல் வங்கி ( தற்போது SBI ) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர். முதன் முதலாக வெளிநாட்டு கார் ( பிரெஞ்ச் டிட்கன் ) வாங்கிய முதல் இந்தியர். தற்போது இந்த கார் விஜய் மல்லையாவிடம் உள்ளது. தன் வின்டேஜ் கலெக்‌ஷன் கார்களில் ஒன்றாக அதை வைத்திருக்கிறார் மல்லையா. தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோயில்களின் திருப்பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார். வட சென்னையில் பல பள்ளிகளும் சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் இவருடை அறக்கட்டளை சார்பில் நடைபெறுகின்றன.
சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது. இந்த நம்பெருமாள் செட்டியார்தான் தன் சொந்த உபயோகத்துக்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயில் வண்டி வைத்திருந்தார். தம் குடும்பத்தினரோடு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்குச் சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார். மற்ற நேரங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தான் இவருடைய ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இவரது பெயரையே இன்று, சென்னை ‘செட்பட்’ Chennai CHETPET தாங்குகின்றது.

தோழ'மை' சக்தி தோற்றுப்போகுமா? (4.5 லட்சம் தோழமைகளை பெற்றுத்தந்த அந்த ஒருநாள்.....)

தோழ'மை' சக்தி தோற்றுப்போகுமா? (4.5 லட்சம் தோழமைகளை  பெற்றுத்தந்த அந்த ஒருநாள்.....)
பணப்பெட்டி உங்களின் கையில் இருக்கிறது, அதன் சாவி இல்லையே என்று கலக்கமா?

ஒரு நிஜ சம்பவத்தை கூறுகிறேன்.. சில வருடங்களுக்கு முன்பு-என நினைக்கிறேன்.... அனைவரும் அலுவலகம் செல்லும் பரபரப்புமிகுந்த காலைநேரம்,  நான் உட்கார்ந்திருந்த அந்த தனியார் பேரூந்தில் இனிமையான பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது...." பாடல்:-வேலை வேலை வேலை மேல மேல வேலை ஆம்பளைக்கும் வேலைபொம்பளைக்கும் வேலை பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேலை..என்ற அவ்வை ஷண்முகியின் பட பாடல்  ஒலித்துக்கொண்டிருந்தது  https://youtu.be/efx5qNSJDNI 

அன்று நான் அலுவலகம் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து, வழியில் ஒரு இடத்தில் சட்டென்று நின்றுவிட, பேரூந்து நின்ற இடத்தில் எந்த பேருந்து நிறுத்தமும் இல்லை, சுற்றுவட்டத்தில் வெகு தொலைவில் ஒரு சிறு வீடு தெரிந்தது, சாலையிலும்  யாரும் பேருந்தை நிறுத்தாதபோது, பேருந்து ஏன் நின்றது? பேரூந்தின் சன்னல் வழியே எட்டிப்பார்த்தேன், பேரூந்து ஏன் நின்றது என எனக்கு எதுவும் புரியவில்லை.  பேருந்தின் ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் ஒலி செய்துகொண்டிருந்தார்,.... யாரையோ அழைக்கிறார் என்பது தெரிந்தது. அங்கு நின்றுகொண்டிருந்த அந்தப் பேரூந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் ஓசை சற்று ஒலி குறைக்கப்பட்டிருந்தது.....   "பாடி அழைத்தேன் உன்னை இதோ, தேடும் நெஞ்சம் வாராய் ..என் தேவி..பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை...என்ற ரசிகன் ஒரு ரசிகை படப்பாடல்  ஒலித்துக்கொண்டிருந்தது https://youtu.be/pcWUqm8T-Pw 


வெகு தொலைவில் இருந்த அந்த வீட்டின் கதவு  ஒன்று திறக்கப்பட்டதும் அங்கிருந்து ஒருவர் பேரூந்தை நோக்கி ஓடி வந்தார்..... அப்போது பேரூந்தில் இருந்த அனைவரும் வாருங்கள் ஷர்மா ஜி என்று ஜன்னல் வழியாக கையை அசைத்து அழைத்தது எனக்கு பெரும் வியப்பைத் தந்தது. ஆகவே பேருந்தை நோக்கி ஓடி வரும் அவர் இந்த பேருந்துக்கு சொந்தக்காரரோ? அல்லது இந்த பேருந்தின் நிறுவனத்தில் பெரிய அதிகாரியோ? அல்லது மிகவும் பிரபலமான ஒருவராக இருப்பார், என்று நினைத்தேன்.  இப்போது அந்தப் பேரூந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் முடிவடைந்து வேறு ஒரு பாடல் ஒலிக்கத்தொடங்கியது .. வா வா வா வெண்ணிலா ஆ ஹா, உன் கண்கள் வெண்ணிலா, ஆ ஹா, என் நெஞ்சில் நீயும் இறங்கி, ஏதோ மாயம் செய்தாய் ஆ ஹா, என் அன்பே வா ஆ ஹா, என் அன்பே வா ஆ ஹா  https://youtu.be/J28_McaEl50 

அப்படி வேகமாக ஓடிவந்த அவர் பேருந்தில் ஏறியதும், முதலில் பேருந்து ஓட்டுனரை நலம் விசாரிக்க... தொடர்ந்து பேருந்தில் இருந்த அனைவரையும், முன் பின் தெரியாத என்னையும் சேர்த்து  நலம் விசாரித்து வணக்கம் கூறினார். மரியாதை நிமித்தம் நானும் வணக்கம் கூறி நன்றி தெரிவித்தேன். அப்போது அந்தப் பேரூந்தில் ஒலித்துக்கொண்டிருந்த பாடல் அடுத்தப் பாடலுக்கு தாவியிருந்தது .. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்.. https://youtu.be/JjRs0KjYzbo

அந்த நிறுத்தத்திலிருந்து கிளம்பிய பேரூந்து சிறிது தூரம் சென்றுகொண்டிருக்கும்போது நான் எனது அருகில் அமர்ந்திருந்தவரிடம்..... சற்றுமுன் ஓடிவந்து பேரூந்தில் ஏறினாரே "ஷர்மா ஜி"  அவர் உங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவரா? உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவரா? என கேட்டபோது.  அதற்கு எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர் "அதெல்லாம் இல்லை, அவர் எந்த அலுவலகத்தில் வேலை செய்கிறார் என்றே தெரியாது, தினமும் இந்த நேர பேருந்தில் பயணம் செய்பவர். தினமும் நலம் விசாரிப்பவர்.  ஏதோ அவரை எங்களுக்கு பிடித்துவிட்டது, அப்படி தொடங்கி எங்களது நட்பு அறிமுகமானது, நாளடைவில் தொடர்ந்து நாங்கள் அவரின் இனிய நண்பரகளாகிவிட்டோம் என்றார். இப்போது என்னுடைய மனது "மயிண்ட்வாய்ஸ்" இந்தப் பாடலை முணுமுணுத்தது ..." என் பிரெண்ட போல யாரு மச்சான்.. அவன் டிரெண்ட யெல்லாம் மாத்தி வச்சான். .படம்: நண்பன்,  இசை: ஹாரிஸ் ஜெயராஜ், பாடலாசிரியர்: விவேகா, பாடியவர்கள்: கிரிஷ், சுசித் சுரேசன். https://youtu.be/97G5LfyFrrI

பேரூந்தில்  அவசர அவசரமாக ஓடி வந்து ஏறிய "சர்மா ஜி" அனைவரையும் பார்த்து சப்தமாக பேசினார்  "இன்று காலையிலிருந்தே எனக்கு தலைவலியாக இருந்தது, எனவே பேருந்து வருவதற்கு முன்பாகவே சாலை ஓரம் காத்திருக்கமுடியவில்லை" ஆகவே பேருந்தை, சற்று காலதாமதமாக்கியதற்கு மன்னிக்கவும் என்று சொன்னவுடனே .... அந்தப்பெருந்திலிருந்த பலரது கைகளில் தலைவலி மாத்திரையும் தண்ணீர் பாட்டிலும் "சர்மா-ஜி" அவர்களை நோக்கி குவிந்ததைப்பார்த்த எனக்கு மேலும் வியப்பைத்தந்தது. அதோடு பேருந்து ஓட்டுநர் குரல்கொடுத்தார் "சர்மா-ஜி வண்டியை மருந்துக்கடையில் நிறுத்தவா?"  என்று கூறி  ... மேலும் எனது வியப்பை அதிகப்படுத்தினார்....  அந்தநேரத்திற்கு ஏற்றாற்போல் பேருந்தில் இந்தப்பாடல் ஒலித்தது....  நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது  https://youtu.be/g3k1BdS-t2Y 
       
எனக்கு மிகுந்த ஆச்சரியமும், அவரின் ஏராளமான நட்பு வட்டத்தைப்பார்த்து பொறாமையாகவும் இருந்தது.  அன்று நான் அது பற்றி யோசிக்க தொடங்கியதின் விளைவாக,  இன்று எனக்கு கடல் கடந்த நிலையிலும் ஏராளமான நட்பு வட்டங்கள் மேலும் மேலும் தொடர்ந்து பெருகிவருகிறது. அப்படிப்பட்ட ஏராளமான நட்பு வட்டத்தைப் பெற்று ஏதாவது பயனுள்ளதாக இருக்கவேண்டாமா? அப்படி மனம் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது இந்தப்பாடல் இனிமையாக ஒலித்தது.... "கோ" என்ற கே. வி. ஆனந்த் இயக்கத்தில் 2011 இல் வெளிவந்தபடத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல்  "கள கள காலா கேங்கு, பல பல பைலா சாங்கு நிட்டம் ஒரு கனவில் தூங்கு.. உள்ளங்கையில் உலகை வாங்கு..https://youtu.be/700-GQQGm_k

அன்று அப்படி உருவான சிந்தனையில் ஒரு பகுதிதான், இலவச வேலைவாய்ப்பு சேவை என்கிற "FREE JOBS" G+ and Face Book ஜி+ குழுப்பக்கம் மற்றும் முகநூல் குழு  போன்ற உதவும் குழுக்கள் உருவானது ... இருந்தும் முக்கியமாக பொருளுதவி மற்றும் பணம், செலவு போன்ற எந்த செயல்களும் நட்பை முறிக்கும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்.  என்னதான் கவனமாக இருந்தாலும், ஆர்வமிகுதியால் எனக்கு கிடைத்த சில நன்மைகள் மற்றவர்களுக்கும் கிடைக்கட்டும் என்கிறநோக்கில், சில  நண்பர்களுக்கு சொன்ன சில இலவச ஆலோசனையால் எனது மூக்கை நானே  உடைத்துக்கொண்ட அனுபவங்களும் உண்டு.  

உங்களின் தொடர்பில் இருக்கும் நட்பு வட்டத்தில் அனைவரிடமும் அவர்களின் அலுவலங்களில் இருக்கும் காலி இட வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை கேட்டு வாங்கி சேகரித்து அதை வேலை தேடும் புதிய முகங்களுக்கு இலவசமாக உதவினால்... உங்களின் நட்பு மேலும் மேலும் பெருகும் அல்லவா?. அப்படி உருவாகிய புதிய பல நட்புக்களின் மகிழ்ச்சியால், மேலும் மேலும் நமது வலிமை கூடும் அல்லவா? அப்படிப்பட்டவர்களின் ஏராளமான நட்பு வட்டம் விரிவடைவது, மிகப் பெரிய வரப்பிரசாதம்.  இப்படிப்பட்ட விசாலமான நட்புவட்டம் அமைவது எத்தனைபேருக்கு நடைமுறையில் சாத்தியமாகிறது?. 
நீங்கள் எந்த நாட்டில், எந்த அலுவலகத்தில் வேளையில் இருந்தாலும், உங்களது நிறுவனத்தில் இருக்கும் காலி வேலைவாய்ப்பு விவரங்களை இந்த FREE JOBS G+ மற்றும் FREE JOBS -Face-Book-group முகநூல் குழு பக்கங்களில் பதிவுசெய்தால் அல்லது தெரியப்படுத்தினால், அது புதியதாக படிப்பை முடித்துவிட்டு வேலைதேடுபவர்களுக்கும், தற்போதைய வேலையிலிருந்து மேலும் சிறப்பான வேறு ஒரு வேலை தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும் அல்லவா?... இப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போது இந்தப்பாடல் எனது செவிகளுக்கு உணவளித்தது.... வாரணம் ஆயிரம் படப்பாடல் "அடியே கொல்லுதே! அழகோ அள்ளுதே! உலகம் சுருங்குதே! இருவரில் அடங்குதே! உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்....  https://youtu.be/oNTOpHEpGiA


உங்களின் தொடர்பில் இருக்கும் நட்பு வட்டத்தில், அனைவரிடமும் அவர்களின் அலுவலங்களில் இருக்கும் காலி இட வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை கேட்டு வாங்கி சேகரித்து அதை வேலை தேடும் புதிய முகங்களுக்கு இலவசமாக உதவினால்... காசா? பணமா? இலவசம்தானே..... ஒருமுறை இந்த FREE-JOBS G+ கூகுள் + குழு பக்கத்திற்கு வந்துதான் பாருங்களேன் இந்த முகவரியில் https://plus.google.com/communities/110765544331828488794
 FREE JOBS
இப்போது சொல்லுங்கள் உங்களைச்சுற்றி உங்களுக்கு தெரியாதவர்கள் என நிறைய மனிதர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் நீங்கள் உடனடியாக அனைவரையும் தெரிந்தவர்களாக நடப்பை ஏற்படுத்திக்கொள்ள, அவர்களோடு நலம்விசாரித்து பழக முயற்சிக்கவேண்டுமல்லவா????  மின்னலே படத்திலிருந்து பாடல் "ஓ மாமா மாமா மாமா மாம மாம மாமோமியா, ஓ SUNDAY MONDAY TUESDAY ஏழு நாளும் KEEP IT FREEயா, பிஸ்மில்லா பிஸ்மில்லா நம் வாழ்வை வாழ்வோம் PLAYFUL ஆ, ஊ லால்லா ஊ லால்லா இது WESTERN கானா கோபாலா, உலகத்தை இது கலக்கிடும் கலக்கிடும் மின்சாரப் பாடலா" ... https://youtu.be/TpbFPbxi8Fk

ஏராளமான பணம் நிறைந்த பணப்பெட்டி உங்களின் கையில் இருக்கிறது, அதன் சாவி இல்லையே என்று கலக்கமா?  குரல் கொடுங்கள்... நலம் விசாரியுங்கள்... ஏராளமான நட்புக் கைகள் உங்களுக்காக உங்கள் பணப்பெட்டியின் சாவியை தேடிக் கொண்டுவந்து உங்கள் கையில் தருவார்கள்....  (ம் ம் ....உங்களது மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது... இருந்தாலும் கொஞ்சம் உண்மையை பேசுங்களேன்).... 
பாடல் .....கொஞ்சம் உளறிக் கொட்டவா? கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா? கொஞ்சம் வாயை மூடவா? கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா?... பாடலின் படம்: "நான் ஈ" இசை: மரகதமணி பாடியவர்: விஜய் பிரகாஷ்... https://youtu.be/FWuAwZs13SI    

என்ன நண்பர்களே இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஏன் என்ற கேள்விஇங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்றஎண்ணம். கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை..... https://youtu.be/2wX5E6qlqdI 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்க்கோனி....புது தில்லியிலிருந்து.